பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பூர்ணசந்திரோதயம்-3 தூரம் நான் பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் அதை உபயோகிப்பது குற்றமாகுமா? இது பிறர் செய்யும் குற்றத்தைத் தடுப்பதே அன்றி, ஒருநாளும் அக்கிரமமாகாது. பொழுது விடிகிற வரையில் நீ இங்கேயே இருந்தால், பாராக்காரன் வந்து விஷயங்களை எல்லாம் தெரிந்துகொண்டு உன்னைத்தான் முன்னிலும் அதிக பந்தோபஸ்தாக இன்னொரு கொடிய இடத்தில் சிறைவைத்து உனக்குத் தக்கபடி சிட்சை நடத்தி வைப்பான்' என்றான். இந்திரபாயி, "இதனால் எனக்கு எப்படிப்பட்ட கொடிய தண்டனை நேர்ந்தாலும், நான் அதைப்பற்றி விசனப்படவே மாட்டேன். தண்டனையும் மானக்கேடும் எனக்கு மாத்திரம் உண்டாகும் என்று நினைத்துக் கொண்டீர்களா? உங்களை மாத்திரம் இவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா? ஒருநாளும் சும்மாவிட மாட்டார்கள். நீங்கள்தான் இந்தச்சுவரைக் குடைந்து என்னை இங்கே அழைத்துப் பலாத்காரம் செய்தீர்களென்று நான் சொல்லி, உங்களுடைய யோக்கியதையே கெட்டுப் போகும்படி செய்து, உங்களைப் பற்றி ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். அப்படிப்பட்ட காரியத்தை நான் செய்ய இடங்கொடுக்கப் போகிறீர்களா? அல்லது, நீங்கள் என்னுடைய பிரியத்தைப் பூர்த்தி செய்யப் போகிறீர்களா? உங்களுடைய ஆயிசுகால பரியந்தம் என்னை வைத்துக்கொண்டு சந்தோஷப் பட உங்களுக்கு முடியாவிட்டால், இப்போது கொஞ்ச நேரமாவது என்னோடு நீங்கள் சந்தோஷமாக இருந்தால், நான் அதோடு திருப்தியடைந்து போய்விடுவேன். இந்த நள்ளிரவில் நாம் மாத்திரம் தனியாக இருக்கும் இந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை யார் அறியப் போகிறார்கள்? நீங்கள் இப்போது உண்மையில் சுத்தமாக இருந்து, நாளைக்கு உலகத்தாருக்கு முன் கெட்ட பெயரெடுத்துப் பழிப்புக்கு ஆளாகப் போகிறீர்களா? அல்லது இப்போது ரகசியத்தில் என்னையும் சந்தோஷப்படுத்தி அதனால் நீங்களும் இன்பம்