பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217 சாத்தியமில்லாத காரியம். நான் இந்தச் சிறைச்சாலைக்குள் வருவதற்கு முன்பு வேறே இரண்டு பெண்கள் என்னிடத்தில் இதே மாதிரிதான் நடந்து கொண்டார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணம் கொஞ்சமும் பலியாமல் போகும்படி நான் செய்துவிட்டேன். உன்னுடைய முடிவும் அப்படித்தான் ஆகப்போகிறது" என்று கூறியவண்ணம் ஆத்திரத்தோடு தனது உடம்பை ஆட்டிக்குலுக்கித் தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனித்தான். அதைக்கண்ட அந்தப் பெண் ரெளத்திராகாரமான மூர்க்கங் கொண்டவளாய்க் கட்டிலடங்கா ஆவேசமும் பலமும் தோற்றுவித்து, அவனை விடாமல் முன்னிலும் அதிக பலமாக அவனைப்பிடித்து இறுக்கிக்கொள்ள, அவளது பிடி இரும்புப் பிடி போல இருந்தது ஆகையால், அவனது உடம்பு நொறுங்கிப் போய்விடும்போல ஆகிவிட்டது. குண்டு குண்டாகத் திரண்டு கரணை கரணையாக இருந்த அவளது அழகிய சிவந்த சதைப் பிடிப்பானகைகளாலும் கால்களாலும், அந்தப்பெண் அவனைக் கொடிபோலச் சுற்றி வளைத்துக் கொண்டவளாய், அவனது மார்பிலும் முகத்திலும் தனது முகத்தை வைத்து அழுத்திப் புதைத்து வேறு பலவாறாகத் தனது மனோ விகாரத்தை வெளிப்படுத்தியும் துவண்டு துவண்டு திமிறுகிறாள். ஒரு புருஷன், தனக்கு இணங்கி வராத ஒரு பெண்ணை பலாத்காரப்படுத்தி அவளது கற்பை அழிக்க எவ்வாறு முயற்சிப்பானோ, அவ்வாறு அந்தப் பெண் நமது கலியான சுந்தரத்தினிடம் நடந்து அவனிடம் பலாத்காரத்தை உபயோகித்தாள். நமது யெளவனப் புருஷன், பலசாலிகளான எத்தனையோ ஆண்பிள்ளைகள் ஒன்று சேர்ந்து ஒரே காலத்தில் எதிர்த்துச் சண்டை செய்தாலும், அத்தனை பேருக்கும் பின் வாங்காமல் எதிர்த்து நின்று வெல்லக்கூடிய செளரியவானாக இருந்தும், அவள் அபலையான பெண்ணாயிற்றே என்ற இரக்கமும், ஒருவிதமான கோழைத்தனமும் கொண்டதன்றி,