பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பூர்ணசந்திரோதயம்-3 கொள்ளுகிறேன் என்று நீங்கள் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். அதன்பிறகு நான் எப்படி மாறிப் போகிறேன் என்று பாருங்கள். அதன்பிறகு நீங்கள் காலால் இடுவதைத் தலையால் செய்து உங்களுடைய கால் செருப்புக்குச்சமானமாக நடந்து கொள்ளுவேன் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். ஆகா! உங்களுடைய உடம்பு எவ்வளவு அழகாகவும், லொகுசாகவும் இருக்கிறது. உடம்பைத் தொடுவதற்கு முன், மயிர்க்காலுக்கு மயிர்க்கால் இன்பவெள்ளம் ஊற்றெடுத்துப் பரவுகிறதே. உங்களுடைய முகம் தேவாமிருதம் ததும்பும் தாமரைப் புஷ்பம் போல எவ்வளவு மனோரம் மியமாக இருக்கிறது! அந்த முகத்தைவிட்டு என் முகத்தை நகர்த்துவது என்றால், என் உயிரையே பிரித்துக் கொண்டு போவது போலல்லவா இருக்கிறது. அதற்கு என் மனம் ஒருநாளும் இனங்காது. ஆகையால், இந்த விசிப் பலகையில் நான் மாத்திரம் பிரிந்துபோய் எப்படி உட்காருகிறது? நீங்களும் என்னோடு கூடவே வந்தால், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப்படுக்கையின்மேல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இஷ்டம்போல உட்கார்ந்திருக்கலாம். வாருங்கள் போவோம். என்ன யோசனை செய்கிறீர்கள்? என்னுடைய வார்த்தை களெல்லாம் பொய்யாக இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா? அல்லது, நான் சுத்தமான மனிஷியல்ல என்று நினைக்கி நீர்களா? அப்படிப்பட்ட சந்தேகமே உங்களுக்கு வேண்டிய தில்லை. என் வார்த்தைகளை நீங்கள் உறுதியாக நம்பலாம். நான் இதுவரையில் எந்தப் புருஷனையும் மனசால் கூட நினைத்தறி யேன்; இனியும் உறுதியோடுதான் இருப்பேன். இந்த உலகத்தையாளும் மகாராஜன் வந்து என்னை வணங்கினாலும், அல்லது, என்னைப் படைத்த பிரம்மதேவன் வந்து என்னை வேண்டினாலும், நான் அவர்களையெல்லாம் கேவலம் துரும்புபோல மதிப்பேனேயன்றிவேறல்ல. நீங்கள் ஒருவர்தான் என் மனசுக்குகந்த மன்மதன். நான் உங்கள் பொருட்டே படைக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னை ஆள்வதற்காகவே