பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பூர்ணசந்திரோதயம்-3 வெட்கமாவது இல்லாம் என்னைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன்என்கிறாய். நான் என்பிடியை விலக்கிக்கொள்ள கொஞ்சம் பலத்தை உபயோகித்தால், நீ கீழே விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ளுகிறாய். ஆகையால், நான் இனி பாராக்காரனைக் கூப்பிடத்தான் போகிறேன். இதனால் வேறு எப்படிப்பட்டதுன்பங்களுக்கு நாம் ஆளானாலும் கவலை இல்லை. பரஸ்திரீகவனம் கூடாது என்ற நிலையிலிருந்து நான் ஒரு நாளும் வழுவி நடக்கமாட்டேன்' என்று அழுத்தமாகக் கூறினான். உடனே இந்திராபாயி, 'அப்படியானால், நான் உங்களை இதோப்படுக்கைக்கு இழுத்துக்கொண்டு போகிறேன். நீங்கள் கூச்சலிட்டுப் பாராக்காரனைக் கூப்பிடுங்கள். யாருடைய கை ஒங்குகிறது என்பதைப் பார்ப்போம். இப்படிப்பட்ட அபூர்வ குணமுடைய ஆண்பிள்ளை இந்த உலகத்திலேயே இருக்க மாட்டான் என்று நினைக்கிறேன். கேவலம் ஒரு பேடிகூட இந்த மாதிரி நடந்துகொள்ள மாட்டானே. நீங்கள் மகா செளரியவான் என்று நான் மதித்து உங்கள் மேல் பிரியம் கொண்டதற்கு இதுதானா வெகுமதி? உங்களிடத்தில் ஆண்மையில்லையா? ஒரு பெண் பிள்ளையின் கையில் அகப்பட்டுக் கொண்டு, சரியான ஆண்பிள்ளை இப்படித்தானா மகா கேவலமாக நடந்து கொள்வான்? நீங்கள் என்ன சொன்னாலும் இன்று நான் உங்களை விடப் போகிறதே இல்லை என்று கூறியவண்ணம், தலைகால் தெரியாமல் மூர்க்கமும், ஆவேசமும் கொண்டு அவனைப் பிடித்துத் தாறுமாறாகக் கட்டி உருட்டிப் படுக்கையை நோக்கி இழுக்கிறாள். அவளது வாயில் நுரை தள்ளுகிறது. மூச்சு இறைக்கிறது. கைகால்கள் தடுமாறுகின்றன. சேலை அவிழ்ந்து போகிறது. தலைமயிர் சின்னாபின்னப்பட்டு சீர்குலைந்து புரளுகிறது. ஆவேசங் கொண்டவள்போல, ஒரே மூர்க்கமாக அவனைப் பிடித்து இழுக்க, அவன் அதற்குமேல் கொஞ்சமும்