பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பூர்ணசந்திரோதயம்-3 வெளியிட்டு விடுவார். அவள் உடனே நம்மை வேலையினின்று விலக்கி அவமானப்படுத்தி அனுப்பிவிடுவாள். பூனாவுக்குப் போகாமல் இப்படியே திரும்பி ஊருக்குப் போனால், நம்முடைய அம்மாள் நம்மை யெல்லாம் சக்கை சக்கையாகப் பிய்த்து எறிந்து விடுவாள். இதற்கு நம்முடைய சின்னம்மாள் தான் ஏதாவது தக்க யோசனை சொல்லவேண்டும்' என்றாள். அதைக் கேட்ட முத்துலக மியம் மாள் அம்மாளுவைக் கபடப் பார்வையாகப் பார்த்து, 'அம்மாளு! நீ சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மனிதரோ நல்ல யெளவனப் புருஷர். இவரை வசப் படுத்துவதற்கு வழியில் லாமலா போய்விட்டது. ஆகா! எனக்கு உன்னுடைய யெளவனப் பருவமும் முகத்தின் வசீகரமும் இப்போது உண்டாகுமானால், இந்த மனிதரை ஒரு நொடியில் என்னுடைய வசப்படுத்திவிடு வேன்' என்று கூறினாள். அதைக் கேட்ட அம்மாளு சகிக்க இயலாத லஜ்ஜையும் அவனமானமும் அடைந்தவளாய்க் கீழே குனிந்து, 'அதெல்லாம் இந்த மனிதரிடம் பலிக்கவே இல்லை. நான் இதுவரையில் சும்மா இருந்தேன் என்று நினைக்க வேண்டாம். நான் என்னால் ஆன ஸாகலங்களை எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். அவர் கொஞ்சமும் வழிக்கு வருவதாகத் தோன்றவில்லை. நானும் எத்தனையோ ஆண்பிள்ளைகளைக் கண்டிருக்கிறேன். இப்பேர்ப்பட்ட அழுத்தமான மனமுடைய யெளவனப் புருஷரை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை” எனறாள. . அதைக் கேட்ட முத்துலகஷ்மி உடனே உண்மையைக் கிரகித்துக் கொண்டவளாய், 'ஒகோ! அப்படியா சங்கதி! இப்போது தான் உண்மை தெரிகிறது. இருக்கட்டும். நாமாக வேறு எந்தக் காரியத்தையும் செய்வது சரியல்ல. நீ ஒரு காரியம் செய். உடனே நீஉங்களுடைய அம்மாளுக்கு ஒரு கடிதம் எழுது. ந்த வர்த்தமானங்களை எல்லாம் அதில் சுருக்கமாகச்