பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பூர்ணசந்திரோதயம்-3 அவளது சொற்களைக் கேட்ட ஷண்முகவடிவு முற்றிலும் கலங்கிக் குழப்பமடைந்து அவள் மறை பொருளாகச் சொன்ன விஷயங்களை அறிந்துகொள்ள மாட்டாதவளாய், 'என்ன அம்மா! நீங்கள் சொல்வது என்றும் எனக்கு விளங்கு வில்லையே! என்னுடைய புருஷர் செளக்கியமாக இருக்கிறாரா என்பதையும், அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் அவருக்கு எவ்விதமான அபாயம் நேர்ந்திருக்கிறது என்பதையும் முதலில் சொல்லுங்கள். மற்ற விவரங்களை நான் அப்புறம் தெரிந்து கொள்ளுகிறேன்' என்றாள். அதைக் கேட்டு வியப்பும், பச்சாதாபமும் அடைந்தவள் - போலக் காணப்பட்ட அந்த ஸ்திரீ, "ஐயோ பாவம்! நீ அவரை இன்னமும் உன்னுடைய புருஷர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அப்படி நினைக்காதிருந்தால் நீ இவ்வளவு தூரம் ஏன் வரப்போகிறாய்? ஒருநாளும் வந்திருக்க மாட்டாய். அவருக்கு உடம்பில் யாதொரு கெடுதலும் இல்லை. அவர் செளக்கியமாகவே இருக்கிறார். ஆனால் அவருடைய மனசுதான் அடியோடு மாறுபட்டுக் கெட்டுப் போய்விட்டது. அதிருக்கட்டும். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கூட உனக்குத் தெரியாதா? அதை அவர் உனக்குக் கடிதத்தின் மூலமாகத் தெரிவிக்கவில்லையா?' என்றாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட ஷண்முக வடிவு தனது ஆசை நாயகர் உயிரோடு இருக்கிறார் என்பதை நிச்சயித்துக் கொண்டாள். ஆனாலும் அந்த ஸ்திரீயின் விபரீதச் சொற்களைக் கேட்டுப் பதறிப் போய், "அவர் எனக்குக் கடிதம் எழுதி சுமார் ஒருமாச காலமாகிறது. கடைசியாக எழுதிய கடிதத்தில் தாம் சில தினங்களுக்குப் பிறகு வேறு விலாசம் தெரிவிக்கிற வரையில், மறு கடிதம் அனுப்ப வேண்டாம் என்று அவர் எழுதித் தெரிவித்திருந்தார். அதன்பிறகு இதுவரையில், எனக்குக் கடிதமே கிடைக்கவில்லை. நான் நிரம்பவும் கவலைகொண்டு கலவரம் அடைந்து தவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் গ্রু