பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பூர்ணசந்திரோதயம்-3 மோகம் கொண்டு பலவகையில் அவர்களுடைய மனதைத் கலைத்து மயக்கிவிட்டாராம். அதுவரையில் நல்ல நடத்தை உடையவர்களாக இருந்த அந்தப் பெண்களில் மூத்த பெண்கள் இருவர் இவரைக் கண்டு மயங்கிப்போய் மதியிழந்து, இவரை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வண்டிக்குள் இருளில் ஏதேதோ பிரயத்தனம் செய்தார்களாம். முதலில் இவர் அவர்களுடைய பிரயத்தனத்துக்கு இணங்காதவர் போலப் பாசாங்கு செய்தாராம். அவர்கள் எல்லோரும் இந்தச்சத்திரத்தில் வந்து இறங்கினார்களாம். அதுவரையில் மன உறுதியோடு இருந்ததாகக்காட்டிக் கொண்ட இவர் அதன்பிறகு ஒருவார காலத்துக்குள் புது மனிதராக மாறிப் போய்விட்டாராம். அந்தப்பெண்கள் இருவரையும் இவர் ஆசைநாயகிகளாக்கிக் கொண்டு தம்மையும் உலகையும் மறந்து சிற்றின்பத்தில் ஆழ்த்தி குதுகல புருஷராக இருந்தாராம். அந்த இரண்டு பெண்களும் அதுபோலவே இவருடைய மையலில் ஆழ்ந்து மதிமயங்கித் தாங்கள் போகவேண்டிய வேலையையும் மறந்து இங்கேயே இருந்து விட்டார்களாம். அவர்கள் பூனாவுக்கு வரவேண்டிய காலத்தில் வரவில்லை என்பதைக் கண்ட இளவரசருடைய பட்டமகிஷி சேவகர்களை அனுப்ப, அவர்கள் இங்கே வந்து அந்த மூன்று தாதிப்பெண்களையும் அவர்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாக வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். அதன்பிறகு இவர் அவர்கள் பிரிந்து போனதைக் குறித்து ஏக்கம் கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல, சில தினங்கள் வரையில் அவர்களுடைய நினைவையே தியானமாகச் செய்து கொண்டிருந்தார். அதன்பிறகு, இந்த ஊரிலுள்ள சில அயோக்கியர்களுடைய சிநேகம் எப்படியோ ஏற்பட்டுவிட்டது. அவர்களுடைய துர்போதனையின் மேல் இவர் இந்த ஊரிலுள்ள சில தாசிகளிடம் சிநேகம் செய்து கொண்டு கெட்டு அலைந்து திரிந்து கடைசியில் ஒரு பெரிய மனிதருடைய பெண்ணின்மேல் துர்மோகம் கொண்டு அவளுடைய அனுமதியில்லாமல் அவர்களுடைய மாளிகை