பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் r 247 களுக்குள் துழைந்து பலாத்காரம் செய்ய அவள் பயந்து நடுநடுங்கிக் கூச்சலிட, அவளுடைய சொந்தக்காரர்கள் வந்து இவரைப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்புவித்து விட்டனர். அவர்கள் இவரைக் கொண்டு போய்ச் சிறைச் சாலையில் அடைத்து விட்டார்கள். அதுமுதல் இவர் சிறைச்சாலையில் இருந்து வருகிறார். போலீஸ் கமிஷனர் இவரிடம் இரக்கம் கொண்டு இவரை எப்படியாவது தப்பவைத்து ஊருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் அடிக்கடி இவரிடம்போய் நல்லபுத்தி புகட்டி, உடனே இந்த ஊரைவிட்டுத் திருவாரூருக்குப் போய் முன் ஏற்பாட்டின்படி உன்னைக் கல்யாணம் செய்துகொண்டு, நல்ல வழியில் நடப்பதாக ஒப்புக் கொண்டால், தாம் இவரைத் தப்ப வைப்பதாகச் சொல் லிப் பார்த்தார். இவர் அதற்கு இணங்கவில்லை. இந்த ஊரிலுள்ள இவருடைய சிநேகிதை களை விட்டுப்போக இவருக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை யாம். உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள இவருக்குப் பிரியமில்லையாம். உன்னை இனி இவர் நினைக்கமாட்டாராம்; சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்தபின் இவர் இந்த ஊரிலுள்ள முக்கியமான ஒரு தாசி வீட்டிலேயே இருந்து விடப் போகிறாராம். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வந்த போலீஸ் கமிஷனர் நிரம் பவும் விசனத் தோடு இந்த விஷயங்களை எல்லாம் எங்களிடம் பிரஸ்தாபித்தார். அதுவும் அல்லாமல், கலியாணசுந்தரம் என்பவர் ஒரு பெரிய மனிதருடைய பெண்ணைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார் அல்லவா? அந்த வழக்கு இன்னம் இரண்டொரு தினங்களில் நியாயாதிபதிக்கு முன்பு விசாரணைக்கு வரப்போகிறது. அந்த விசாரணையில் இவர் உண்மையில் குற்றவாளிதான் என்பது நன்றாக ருஜுவாகி விடும். உடனே, இவருக்குக் குறைந்தது ஒரு வருஷ காலத்துக்காவது கடினகாவல் தண்டனையோ? அல்லது, பிரம்மாண்டமான அபராதமோ விதிக்கப்படுவது நிச்சயம். அந்த