பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பூர்ணசந்திரோதயம்-3 ஆண்பிள்ளைகள் இப்படித்தான் அபாயங்களுக்கு ஆளாக்இ விடுகிறார்கள். அதுவுமன்றி, அப்படிப்பட்ட பெண்பிள்ளைகள் அழகும் யெளவனப் பருவமும் உடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு உண்டாகக்கூடிய துன்பங்களும் விபத்துகளும் எண்ணிறந்தவை. இப்போது என்னோடுகூட வருவதைப் பற்றி நீ கொஞ்சமும் அதைரியப்பட வேண்டியதே இல்லை. இமைகள் கண்களைக் காப்பதுபோல நான் உன்னைக் காத்து மறுபடியும் இங்கே கொண்டுவந்து சேர்க்கிறேன்; உன்னுடைய வேலைக்காரி செளக்கியப்பட சில தினங்களாகும். ஆனால், அதற்குள் இந்த வழக்கின் விசாரணை முடிந்து போய்விடும். நீ எத்தனையோ பாடுபட்டு இவ்வளவு தூரம் வந்ததெல்லாம் உபயோகமில்லாமல் போய்விடும். ஆகையால், நீ யோசனை செய்யாமல் புறப்பட்டு வா. நான் வண்டியில் ஏறிக்கொண்டு வந்திருக்கிறேன். அது இதோவாசலில் நிற்கிறது. அதற்குள்நாம் இருவரும் உட்கார்ந்துகொண்டு அங்கே போவோம். கமிஷனர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்டுக்கொள். அதன்பிறகு நான் மறுபடியும் உன்னை இங்கே கொண்டுவந்து விட்டுப் போகிறேன்' என்று கரைகடந்த அன்போடு பேச, அதைக் கேட்ட நிஷ்கபடியான ஷண்முகவடிவு அப்படியே செய்வதாக இணங்கி உடனே புறப்பட்டாள். அந்த ஸ்திரீ ஷண்முகவடிவை அழைத்துக் கொண்டு சத்திரத்தை விட்டு வெளிப்பட்டு, வெளியில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த வண்டியை அடைந்து, அந்த மடந்தையும் தானுமாக வண்டிக்குள் உட்கார்ந்து கொள்ள வண்டி உடனே புறப்பட்டுக் கால் நாழிகை நேரத்தில் போலீஸ் கமிஷனரினது இருப்பிடத்தை அடைந்தது. ஷண்முகவடிவினது இருதயம் திடுக்திடுக்கென்று அடித்துக்கொண்டே இருந்தது. அடி வயிற்றில் சகிக்கவொண்ணாத சங்கடம் தோன்றிக் கலக்கிக் கொண்டே இருந்தது, மனம் மிகுந்த சஞ்சலமடைந்து தவித்தது.