பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர்கே.துரைசாமி ஐயங்கார் 255 இடைபட்டிருக்கிற மனிதர் அவர்தானோ அல்லது வேறே இன்னிய மனிதரோ என்ற சந்தேகமும் உண்டாகிறது. இத்தனை விவரங்களையும் கேட்டபிறகு நான் இப்போது அவரிடம் போய் நேரில் பார்க்கலாமோ பார்க்கக்கூடாதோ என்பதைக்கூட என்னால் நிச்சயிக்கக் கூடவில்லை. எனக்கும் அவருக்கும் சாஸ்திர முறைப்படி இன்னம் கலியாணம் நிறைவேறாது இருந்தாலும், அவர் ஒரு சமயத்தில் என்னுடைய உயிரையும் கற்பையும் காப்பாற்றியதன்றி அது முதல் இது பரியந்தம் என்னிடத்தில் மரியாதையாகவும் நிர்ணயம் தவறாமலும் பெருந்தன்மைக்கு இழுக்கில்லாமல் நடந்து வந்திருக்கிறார். என் குடும்பத்துக்குத் தலைவியான என் தமக்கை என்னை அவருக்குக் கட்டிக் கொடுப்பதாகத் தீர்மானித்துவிட்டாள். கலியாணம் முடிய இருந்த சமயத்தில் ஒரு முக்கிய சங்கதியைக் குறித்து அவர் அவசரமாகப் புறப்பட்டு இங்கே வர நேர்ந்தது. வந்த இடத்தில் இப் படிப்பட்ட விபரீத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நான் உங்களுடைய கடிதத்தைப் பார்த்த உடனே கலவரமடைந்து புறப்பட்டு நேராக இங்கே வந்துவிட்டேன். இப்போது வெளியான விவரம் எல்லாம் அப்போதே எனக்குத் தெரிந்திருந்தால், நான் உடனே தஞ்சாவூருக்குப் போய் அங்கே இருக்கும் என் அக்காளைக் கண்டு சங்கதிகளை அவளிடம் சொல்லி இதற்குத்தகுந்த வேறே மனிதர்களை அனுப்பி இருக்கலாம். இப்போது நான் இங்கே வந்துவிட்டேன். வந்த இடத்தில், என் காதால் கேட்கத் தகாத விஷயங்களை எல்லாம் நான்கேட்கிறேன். இவைகள் உண்மையாக இருக்கக்கூடாதென்றே என்மனம் விரும்புகிறது. எல்லாவற்றிற்கும் நான் நேரில் போய் அவரைக் கண்டு விவரங்களை எல்லாம் அவருடைய வாய் மூலமாகவே கேட்டுக் கொண்டால், நம்பிக்கை உண்டாகும் என்று நினைக்கிறேன். இந்த ஊருக்கு நான் புதியவள். அதுவுமன்றி நான் சிறு பெண் ஆகையால், வக்கீல் முதலிய யாரிடத்திலும் போய் இந்த விசாரணைக்குத் தகுந்த ஏற்பாடுகளை எல்லாம் பூ.ச.!!!-17