பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பூர்ணசந்திரோதயம்-3 செய்யக்கூடாத நிலைமையில் இருக்கிறேன். எங்கள் விஷயத்தில் இவ்வளவு தூரம் இரங்கி அபிமானம் வைத்து உதவிசெய்யத் தொடங்கியிருக்கும் நீங்களே இன்னம் என்னென்ன அனுகூலங்கள் செய்ய முடியுமோ அவைகளை எல்லாம் செய்து அவரைக் காப்பாற்றி விடுங்கள். இப்போது நான் அவரை நேரில் பார்த்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளுகிறேன். அவர்தப்பி வெளியில் வருகிற வரையில் நான் இந்த ஊரிலேயே இருக்கவோ, அல்லது ஊருக்குத் திரும்பிப் போகவோ, அவர் சொன்னால், அதுபோல நடந்து கொள்ளுகிறேன்' என்று பணிவாகவும் முற்றிலும் பரிதாபகரமாகவும் கூறினாள். போலீஸ் கமிஷனர், "சரி; அப்படியே செய்யலாம். ஆனால், ஒருவிஷயம். நாங்கள் உன்னை ஊரிலிருந்து வரவழைத்ததும், நீ அவரிடம் போய்ப் பார்க்கச் செய்ததும் வேறே யாருக்காவது தெரிந்தால், நான் அவரிடத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு அனுகூலம் செய்வதாக ஜனங்களும் என்னுடைய கீழ் அதிகாரிகளும் நினைத்து என்னைப் பற்றி அவதூறு சொல்லத் தொடங்குவார்கள். ஆகையால், நான் நாளைய தினம் காலைக் குள் நல்ல சந்தர்ப்பம் பார்த்து உன்னிடம் அந்த அம்மாளை அனுப்புகிறேன். நீ உடனே புறப்பட்டு வந்தால், இந்த அம்மாள் உன்னை நேராக சிறைச்சாலைக்கே அழைத்து வருவார்கள். அப்போது நீ அவரைப் பார்த்துப் பேசி, உண்மைகளை அறிந்துகொண்டு உன்னுடைய இஷ்டப்படி நடந்துகொள். அந்த மனிதர் உண்மையிலேயே நல்லகுணம் உடையவராக இருக்கலாம்; இந்த ஊருக்கு வருவதற்குமுன் நல்ல நடத்தை உடையவராக இருந்திருக்கலாம். ஆனால், அந்தத் தாதிப் பெண்களோடு நெருங்கிப் பழகிய பிறகு அவருடைய மனசு மாறிப் போயிருக்கலாம். அவருக்கும் நல்ல பருவகாலமல்லவா? அழகான பெண்களைக் கண்டால், யாருக்குத்தான் மனம் சபலிக்காது! ஒரு வேளை அவருடைய