பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பூர்ணசந்திரோதயம்-3 அதைக் கேட்ட ஷண்முகவடிவு திடுக் கிட்டு திக் பிரமை கொண்டு, 'அம்மா சொல்வதைக் கொஞ்சம் நன்றாகத்தான் சொல்லுங்களேன். சிறைச்சாலையில் அப்படி என்ன விசேஷம் நேர்ந்தது? அதற்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா, சிறைச்சாலைக்குள் அடைபட்டிருக்கும் எங்கள் மனிதர் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? விஷயத்தை நன்றாகச் சொல்லுங்கள்' என்றாள். உடனே அந்த ஸ்திரீ, 'பாராக்காரன் ஓடிவந்த அவசரத்தில் அவன்கமிஷனரிடத்தில் ஏதோ இரண்டொரு வார்த்தைகள்தான் சொன்னான். அதைக் கேட்ட கமிஷனர் என்னை எழுப்பி இரண்டொரு வார்த்தைகள் சொன்னார். சிறைச்சாலையில் கலியாணசுந்தரம் மகா அபூர்வமான ஒரு காரியம் செய்து கொண்டிருப்பதாகவும், அதை நீ நேரில் பார்த்தால், அவருடைய உண்மையான குணம் எப்படிப்பட்டது என்பது நேருக்கு நேர் நன்றாகத் தெரிந்து போகும் என்றும், உடனே உன்னையும் அழைத்துக்கொண்டு அவசரமாய்ப் போக வேண்டும் என்றும் சொன்னார். உடனே வண்டி பூட்டப்பட்டது. இங்கே வந்து சேர்ந்தோம். நாம் போய் வண்டியில் உட்கார்ந்தவுடனே, மற்ற விவரத்தை எல்லாம் சொல்லும் படி நான் அவரிடம் கேட்கிறேன். விஷயத்தை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள லாம். நீ உடனே எழுந்து வா. உன்னுடைய வேலைக்காரிக்கு உடம்பு குணப்பட்டிருந்தால், அவளை வேண்டுமானாலும் அழைத்துக் கொண்டு வா; ஆனால் ஒரு விஷயம்; அந்த மனிதர் செய்யும் காரியத்தை வேலைக்காரி நேரில் பார்த்தால், இனிமேல் அவளுக்கு நிரம்பவும் இளக்கமாகிவிடும்; அது விஷயத்தை நீ தான் யோசித்துக் கொள்ள வேண்டும்' என்றாள். அதைக்கேட்ட மெல்லிளந்தோகையான ஷண்முகவடிவு, முற்றிலும் கலக்கமும் குழப்பமும் அடைந்தவளாய்த் திடுக் கிட்டெழுந்து தனது உடைகளைச்சீர்திருத்திக் கொண்டவளாய்த் தனது வேலைக்காரி படுத்துக் கொண்டிருந்த இடத்திற்குப்போய்