பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 சந்தோஷமாகவும் நடந்து கொள்ளவில்லை. ஆனாலும், அவனிடத்தில் பழையபடி சிநேக பாவமாகவே நடந்து கொண்டனர். மறுநாள் தினமும், அந்தப் பெண்டிர் நால்வரும் சத்திரத்தை விட்டுப் புறப்பட்டு ஊருக்குள் போய், பலவிதமான விநோதக் காட்சிகளை எல்லாம் பார்த்து விட்டுத் திரும்பினர். ஆனால், அவர்களது தகரார் சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. ஆனால், கலியாணசுந்தரம் ஒரு விஷயத்தை மாத்திரம் நன்றாகக் கவனித்து வந்தான். அதற்குமுன் அவனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் அம்மாளுவே செய்து, அவனுடன் கூடவே இருந்து ஸ்ரஸ் மொழிகள் கூறி, அவன் எள் என்பதற்குமுன் எண்ணெயாக நடந்துவருவாள். அவள் தனது உற்சாகத்தையும் குது கலத்தையும் இழந்து தூர விலகி இருந்தாள். ஆனால், அவளுக்குப் பதிலாக தனம் என்பவளே இப்போது அவனுக்கு அருகில் நெருங்கி அவனுக்குரிய காரியங்களை எல்லாம் நிரம் பவும் பயபக்தியோடும் உல்லாசமாகவும் செய்து கொண்டிருந்தாள். அந்த மாறுபாட்டைக் கலியாணசுந்தரம் கவனித்து, அதன் கருத்து என்னவாக இருக்கலாம் என்று தனக்குள்ளாகவே எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அதுபோலவே மேலும் இரண்டொரு நாட்கள் கழிந்தன. அப்போதும் அம்மாளு தங்களது முடிவைக் கலியான சுந்தரத்திற்கு வெளியிடாமலே இருந்து வந்தாள். அவனும் அதைப் பற்றிய பேச்சையே எடுக்காமல் இருந்து வந்தான். இரண்டாவது சகோதரியான தனமே அவனிடம் நெருங்கி மேல் விழுந்து அன்னியோன்னியமாகப் பழகி அவனது காரியங்களை எல்லாம் கவனித்துச் செய்து வந்தாள். மற்ற எல்லோரும் தங்களது இயற்கையான மகிழ்ச்சியையும் உல்லாச வார்த்தைகளையும் அடக்கிக்கொண்டு அதிகமாகப் பேசாமல் அநேகமாக மெளனமே சாதித்து வந்தனர். அவர்கள் தங்களது ரகசியம் அவனுக்குத்தெரிந்து போய்விட்டதே என்பதைப்பற்றி மிகுந்த துக்கமும் ஏக்கமும் கொண்டுவிட்டார்கள் என்பது,