பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27Ο பூர்ணசந்திரோதயம்-3 படுக்கவைத்து உன்னுடைய மூர்ச்சை தெளியும் படியான காரியங்களைச் செய்தேன். நீ இப்போதுதான் விழித்துக் கொண்டாய். இதுவரையில் இறந்து போனவள் போலக் கிடந்தாய்' என்றாள். உடனே ஷண்முகவடிவு அளவற்ற துக்கமும் வெட்கமும் கொண்ட மனத்தினளாய், 'அம்மா மகாதுர்ப்பாக்கியவதியான நான் இனி உயிரோடு இருந்தாலும் ஒன்றுதான்; இறந்து போனாலும் ஒன்றுதான். எனக்கு நீங்கள் உபசரணை செய்து என் மூர்ச்சையைத் தெளிவிக்காமல் அப்படியே இறக்க விட்டிருந்தால் அது ப்ெருத்த உதவியாக இருந்திருக்குமே. இனி நான் செய்வதற்கு என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட விசனமும் வெட்கமும் உண்டான பிறகு நான் இனி இந்த உலகத்தில் உண்மையான சுகத்தையும் சந்தோஷத்தையும் அடையப் போகிறேனா? ஒருநாளும் இல்லை' என்று நிரம் பவும் கலவரமாகவும் உருக்கமாகவும் கூறினாள். அதைக் கேட்ட ஸ்திரீ அவளது விஷயத்தில் அந்தரங்கமான அன்பும் பட்சமும் அனுதாபமும் கொண்டவள் போலத் தோன்றி, "பெண்ணே நீ சொல்வது நிஜமான விஷயந்தான். இந்த மனிதர் இப்படிப்பட்ட நடத்தையில் ஒருநாளும் இறங்கியிருக்கமாட்டார் என்று நானும் முதலில் சந்தேகப் பட்டேன். போலீஸார் கட்டுப்பாடாக இவர்மேல் இந்தக் குற்றத்தைச் சுமத்தி இருக்கிறார்கள் என்றே நான் நினைத்துப் போலீஸ் கமிஷனர் சொன்னதைக் கூட நம் பாமலேயே இருந்தேன். இப்போது எல்லா விஷயத்தையும் கண் கூடாக நேரில் பார்த்தபோதுதான் என் மனசில் நம்பிக்கை ஏற்பட்டது. இன்னமும் என் மனம் இதை உண்மையென்று நம்ப மாட்டேன் என்கிறது. விடியற் காலையில் நாம் பார்த்தது, ஏதாவது நாடகத்தின் காட்சியாக இருக்குமோ என்று என் மனம் இன்னமும் சந்தேகப்படுகிறது. இந்த மனிதர் எவ்வளவு துணிகரமான வேலை செய்திருக்கிறார் பார்த்தாயா? நினைக்க