பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 271 நினைக்க ஆச்சரியம் அடங்க மாட்டேன் என்கிறது. இப்போது நாம் கண்ட காட்சியிலிருந்து இனியும் அந்த மனிதர் சுத்தமானவர் என்று நாம் சொல்லப்போனால் நமக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றுதான் மற்றவர்கள் நினைப்பார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் இவரைப் பற்றி இதற்கு முன் அனுப்பியுள்ள பிராது பொய்யென்று இனி நாம் எப்படிச் சொல்லுகிறது? இவ்வளவு பெருத்த அக்கிரமும் துணிகரமான காரியமும் செய்ய எத்தனித்த மனிதர் எதைத்தான் செய்ய மாட்டார்? இனி அவரைப் பற்றி நாம் எவ்வளவு தான் வருத்தப்பட்டாலும், அவர் தண்டனை அடைவது நிச்சயம். காரியம் இவ்வளவு தூரம் நடந்தபிறகு, தாம் அவரைக் காப்பாற்றுவது துர்லபம் என்று போலீஸ் கமிஷனர் சொல்லிவிட்டுப் பெண்ணையும் அவரையும் பிரித்து வெவ்வேறு அறைகளில் அடைத்துவிட்டார். நாளைய தினம் நடக்கும் விசாரணையில் எல்லா விஷயமும் வெளியாகிவிடும். பாராக்காரர்கள் எல்லோருக்கும் இந்தச் சங்கதி தெரிந்துபோய் விட்டது. ஆகையால், இதைப் போலீஸ் கமிஷனர் இனி மறைக்கவே முடியாது. அவருக்கு எப்படியும் கடினமான தண்டனை கிடைப்பது நிச்சயமாகவே தோன்றுகிறது. உன் மனசில் பழைய பிரியம் இன்னம் கொஞ்சம் இருந்து ஒருவேளை போராடுமானால் நீ அவருக்கு வக்கீல் வைத்து எதிர்வாதமாடி உன்னால் இயன்ற உதவியைச் செய். அதற்கு நானும் என்னாலான உதவியைச் செய்யத் தடையில்லை. ஆனால், போலீஸ் கமிஷனர் இனி எந்த உதவியையும் செய்யமாட்டார்” என்றாள். அதைக்கேட்ட ஷண்முகவடிவு, 'அம்மா என்னுடைய புத்தி முழுதும் குழம்பிப் போய்விட்டது: பைத்தியம் கொண்டமாதிரி இருக்கிறது. போலீஸ் கமிஷனரவர்கள் எந்த உதவியும் செய்யமுடியாவிட்டால்,என்னால்தான் என்ன காரியம் சாதிக்க முடியும்? நான் இந்த ஊருக்குப் புதுமனுஷி, எனக்கு எந்த J.3.Hi-48