பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பூர்ணசந்திரோதயம்-3 இறங்கிக்கொண்டு அக்காள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு அதிக அலைச்சல் இல்லாமல் நேராக அங்கே போய் விடலாம்' என்றாள். அதைக்கேட்ட அந்த ஸ்திரீநிரம்பவும் சந்தோஷம் அடைந்த வளாய், "ஓ! நீ அவசியம் என்னுடைய வீட்டுக்கு வரவேண்டும். ஏதோ ஈசுவரன் கிருபையால் எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. என்னுடைய வீடு அரண்மனைபோல விசால மாகவும் சகல செளகரியங்களும் நிறைந்ததாகவும் இருக்கிறது. நீ வந்து அங்கே சுகமாக இரு. உன்னுடைய அக்காள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு உன்னை அவளிடம் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். உனக்கு எவ்வளவு காலம் தஞ்சாவூரில் இருக்கப் பிரியமானாலும் நீ என்னுடைய மாளிகையில் சம்பிரமமாக இருக்கலாம். நீ காலால் இடும் வேலையைத் தலையால் செய்யக்கூடிய எத்தனையோ வேலைக்காரிகள் என் வீட்டில் இருக்கிறார்கள். உனக்கு ஒரு குறைவும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று அந்தரங்க விசுவாசத்தோடு கூறினாள். மறுநாள் விடியற் காலையில் வண்டியோடு அந்த ஸ்திரீ புறப்பட்டு வருவது என்றும், ஷண்முகவடிவு வேலைக்காரி யோடு பிரயாணம் புறப்படச் சித்தமாக இருப்பது என்றும் அவர்கள் முடிவு செய்துகொண்டனர். உடனே அந்த ஸ்திரீ அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டாள். ஷண்முக வடிவு அன்றைய தினம் முழுதும் தனது வேலைக்காரியை நிரம் பவும் கவலையோடும் ஜாக்கிரதை யுடனும் கவனிக்க, அவள் எழுந்திருக்கவும் நடக்கவும் கூடிய நிலைமையை அடைந்தாள். அன்றைய இரவிலேயே அவர்கள் தங்களது சாமான்களை எல்லாம் பிரயாணத்துக்குச் சித்தமாக மூட்டை கட்டி வைத்து விட்டுத் தங்களது போஜனத்தை முடித்துக்கொண்டு படுத்துத்துயின்றனர்.