பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 அந்த ஸ்திரி, 'உன்னுடைய அக்காள் எந்தத் தெருவில் இருக்கிறாள்? அவளுடைய பெயர் என்ன?’ என்றாள். ஷண்முகவடிவு, “சக்காநாயக்கர் தெருவில் 13வது இலக்கம் உள்ள வீட்டில் சோமசுந்தரம் பிள்ளை என்ற ஒரு பெரிய மனிதரும் அவருடைய சம்சாரமும் இருக்கிறார்கள். அவர்களோடு என் அக்காள் இருந்து வருகிறாள். அவளுடைய பெயர் கமலம்' என்றாள். அதைக்கேட்ட அந்த ஸ்திரீ அளவற்ற வியப்பும் சந்தோஷ மும் அடைந்தவளாய்க் காணப்பட்டு, 'அப்படியா சங்கதி! சக்கா நாயக்கன் தெருவிலுள்ள சோமசுந்தரம்பிள்ளை வீட்டிலா உன் அக்காள் இருப்பது? அந்த வீடு எங்கே இருக்கிறது என்று யாரும் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் இந்த உலகமறிந்த பெரிய சீமானாயிற்றே. அவருடைய மாளிகை இருக்குமிடம் ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும். அதுவுமன்றி, அவர் எனக்கும் நிரம்பவும் பழக்கமானவர். அவரிடத்தில் நான் வேறொரு காரியார்த்தமாகப் போக வேண்டியிருக்கிறது. ஆகையால், நானே புறப்பட்டு நேரில் போய் என் காரியத்தையும் முடித்துக்கொண்டு உன் அக்காளையும் கண்டு நீ வந்திருக்கும் வரலாற்றைச் சொல்லி உன்னை எப்போது அங்கே அழைத்துக் கொண்டு வரலாம் என்பதையும் அவளிடம் கேட்டுக் கொண்டு வருகிறேன்' என்றாள். ஷண்முகவடிவு, 'சந்தோஷம்; அப்படியே செய்யுங்கள். ஆனால், நீங்கள் அந்த சோமசுந்தரம் பிள்ளையினிடத்தில் என்னுடைய வரலாறுகளை எல்லாம் வெளியிட வேண்டாம். நான் என்னுடைய அக்காளைப் பார்த்தபிறகு அவள் எதை வெளியிடச்சொல்லுகிறாளோ அதை மாத்திரம் வெளியிடலாம். கோலாப்பூரில் நடந்த விஷயமெல்லாம் அவர்களிடம் வெளியிடலாமோ வெளியிடக் கூடாதோ, எல்லாவற் றிற்கும் நான் என்னுடைய அக்காளைப் பார்த்தபிறகு மற்ற