பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 - பூர்ணசந்திரோதயம்-3 இப்போது புதிதாக வந்துள்ள பெண்ணுக்கு இணையாக மாட்டாள் என்றும், இருவரையும் ஒத்திட்டுப் பார்க்குமளவில் பூர்ணசந்திரோதயம் குப்பையில் கிடப்பதற்கேதகுந்தவளாவாள் என்றும் அம்மணி பாயி சொன்னதைக் கேட்கவே, புதிதாக வந்திருக்கும் பெண் தெய்வலோகத்திலிருந்து தோன்றியுள்ள அப்ஸர ஸ்திரீயாகத்தான் இருக்கவேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது. இளவரசர் பூர்ண சந்திரோதயத்தை அடைந்து விட்டாரே என்ற வயிற்றெரிச்சலும் பொறாமையும் அவரது மனதில் இருந்து அவரை வருத்தி வருந்தின ஆகையால், அவனை விடப் பன்மடங்கு சிரேஷ்டமான பெண்ணைத் தாம் அடைந்துவிட்டால், இளவரசரையும், பூர்ணசந்திரோதயத்தை யும், தாம் தோற்கடித்ததுபோல ஆகும் என்ற நினைவு உண்டானது அன்றி, அப்படிப்பட்ட நிகரற்ற பெண்ணை வேறு எவரும் அடையுமுன் தாமே அடைந்துவிட வேண்டும் என்ற மூர்க்கமான விரகதாபமும் ஏற்பட்டது. ஆகையால், அம்மணிபாயி எவ்வளவு அபாரமான பொருளைக் கேட்ப தாயினும், அதை உடனே கொடுத்து அந்தப் பெண்ணைத் தமது ஜாகைக்கு வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டு விட்டது. அதுவுமன்றி, அம்மணிபாயியோடு அவர் அதற்குமுன் நன்றாகப் பழகி அவளது குணத்தை அறிந்தவராதலால், ஒரு பெண்ணினிடத்தில் உண்மையான யோக்கியதை இல்லாவிட்டால் அவள் பொய்யாகப் புகழ்ச்சி செய்யக்கூடியவள் அல்லவென்பது அவருக்குத் தெரியும். ஆதலால், அவள் சொன்னதை அப்படியே வேத வாக்காக ஏற்றுக்கொண்டவராய் அந்தரங்கமான வாத்சல்யத்தோடு உருக்கமாக அவளை நோக்கி, 'அம்மணிபாயீ என் விஷயத்தில் நீ சொன்ன வார்த்தைகளை எல்லாம் கேட்க, என் மனம் நிரம்பவும் சந்தோஷம் அடைகிறது. நீ என் விஷயத்தில் வைத்திருக்கும் அந்தரங்கமான பிரியத்தையும் அபிமானத் தையும் நான் நன்றாக அறிவேன்; அதனாலேதான் நான் உன்னைக் காணும் போதெல்லாம் என் வாய் தானாகவே