பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 - பூர்ணசந்திரோதயம்-3 கொள்ளும்படி நடந்துகொண்டனர். அவள் அன்றைய தினம் மாலையிலேயே அம்மணிபாயியினது வீட்டில் விருந்துண்டு வந்திருந்தாள் ஆகையால், அவள் தனக்கு அதற்குமேல் மறுபடியும் போஜனம் அவசியமில்லை என்று எவ்வளவோ வற்புறுத்திக் கூறினாள். ஆனாலும், லீலாவதியும் கிழவரும் அவளுக்குச் செய்த உபசரணைகளினாலும், அவர்கள் அவளை நிரம்பவும் நயந்து வேண்டிக் கொண்டமையாலும், அவள் அவர்களினது விருப்பத்தை மறுக்கமாட்டாதவளாய் அதற்கிணங்கி மறுபடியும் உண்பது கஷ்டமாகிவிட்டது. மாதுரியமான போஜனமும், இனிமையான சிற்றுண்டிகளும் தேன் ததும்பிய கனிவர்க்கங்களும் அவளுக்கு முன்னர் நிரப்பப் பட்டன. ஆகையால், அவள் அவர்களது மனம் கோணாதிருக்க வேண்டுமென்ற நினைவினால் தூண்டப்பட்டு அவற்றி லெல்லாம் சிற்சில உண்டு எழுந்தாள். லீலாவதி அவளை ஒரு நொடிநேரமும் விட்டுப் பிரியாமல், வாஞ்சையான வார்த்தைகளைப்பேசி, அவள் கால் நாழிகையில் தன்மேல் பிரியங்கொள்ளும்படி செய்து அவளோடு அன்றிரவு நெடுநேரம் வரையில் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்து அவளது வரலாறுகளையெல்லாம் சிறுகச் சிறுகக் கேட்டறிந்து கொண்டவளாயிருந்து கடைசியில் அவளை நிரம் பவும் லொகுசான ஒரு பஞ்சணையில் சயனிக்கவிடுத்துத் தானும் அவளுக்கு அருகில் இன்னொரு சயனத்தில் படுத்துக் கொண்டாள். மருங்காபுரி ஜெமீந்தார் ஷண்முகவடிவினிடத்தில் எவ்வித துர் எண்ணமும் கொள்ளாதவர்போல நட்ந்து தூரத்திலிருந்தபடி லீலாவதியைத் தூண்டி அவள் மூலமாக ஷண்முகவடிவுக்கு நிரம்பவும் உபசரணைகள் புரிந்து ஆறுதல் மொழிகள் கூறிவந்தார். - . - கோலாப்பூரில் நடந்த மகா துக்ககரமான விபரீதச் சம்ப்வத்தைப் பற்றிய நினைவு ஷண்முக்வடிவினது மனதில் அப்போதும் புதிதாகவே இருந்து அவளது மனதையும் :