பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பூர்ணசந்திரோதயம்-3 ஒன்றையும் அறியாத குழந்தைபோல நிச்சலனமான முகத் தோற்றத்தோடு உட்கார்ந்திருந்தான். அவ்வளவுதூரம் துணிவு அடைந்திருந்த அந்தப் பெண்களைத் தான் திருத்தி நல்வழிப்படுத்த நினைப்பது சிறிதும் பலியாத முயற்சி என்ற எண்ணம் அவனது மனதில் தோன்ற ஆரம்பித்தது. ஆகையால் அவ்வளவோடுதான்.அவர்களைவிட்டு விலகிக் கொள்ளலாமா என்ற நினைவும் தோன்றியது. ஆனாலும், சிறிது நேரத்தில் அவர்களது விஷயத்தில் தயாளமும் இரக்கமும் தோன்றி, அவனது மனதை இளக்கின. ஆகையாலும், தான் அவர்களது சகோதரியான சிவபாக்கியத்திற்குச் செய்திருந்த வாக்குறுதியின் நினைவு தலைகாட்டியது. ஆகையாலும், அதற்குமேல் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம் என்று அவன் பொறுமையாக உட்கார்ந்திருந்தான். சிறிது தூரத்தில் நின்றபடி தனது மனத்தின் காம விகாரத்தையும், நெகிழ்வையும் தவிப்பையும் தனது கண்களின் வழியாக வெளிப்படுத்தி, நிரம் பவும் பரிதாபகரமான முகத்தோற்றத்தோடு அவனை உற்றுப் பார்த்தவண்ணம் நாணித் தயங்கி அம்மாளுவும் நிற்க சிறிது நேரம் கழிந்தது. யார் என்ன பேசுவதென்பது நிச்சயப்படாமையால், இருவரும் அரைக்கால் நாழிகை சாவகாசம் வரையில் மெளனம் சாதித்தனர். அதற்குள் கலியாணசுந்தரம் ஒருவாறு துணிவடைந்தவனாய் நிமிர்ந்து மிகுந்த இரக்கத்தோடு அவளைப் பார்த்து, 'அம்மாளு! நீ தலைவலியினால் அவஸ்தைப் படுவதாகக் கேள்வி யுற்றேன். ஆனால், உன்னுடைய முகத்தைப் பார்த்தால், தலைவலி நின்று போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதைப்பற்றி நான் சந்தோஷம் அடைகிறேன். அதுவுமன்றி, நான் உன்னோடு ஒரு விஷயத்தைப் பற்றித் தனியாக இருந்து பேச நினைத்தேன். அதற்கும் அனுகூலமாக நீயே இப்போது இங்கே வந்ததைப் பற்றி நான் நிரம் பவும் அதிக சந்தோஷம் அடைகிறேன்" என்றான். எதிர்பாராத அவனது சொற்களைக் கேட்ட அம்மாளு அளவற்ற குதூகலமும் ஆனந்தமும் அடைந்தாள்.