பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3C பூர்ணசந்திரோதயம்-3 அவசரமாகக் கூப்பிட அதைக் கண்டு முற்றிலும் குழப்பமும் கலக்கமும் அடைந்த நமது உத்தம புருஷன் விரைவாகப் பாய்ந்து அவளைப் பிடித்து மெதுவாக நடத்தி விசிப் பலகையண்டை கொணர்ந்து, அதன்மேல் படுக்கவைக்க அவள், "ஐயோ! என்னைப் படுக்கவைக்க வேண்டாம். என் உடம்பு பறந்துபோய் விடும் போலத் தவிக்கிறது, என்னை இப்படியே கட்டிக் கொண்டிருங்கள்' என்று நிரம்பவும் உருக்கமாகவும் கனிவாகவும் கூறி, அவனைப் பிடித்திருந்த பிடியை விடாமல் கட்டிலடங்கா மோக ஆவேசத் தோடு அவனது உடம்பைப் பிடித்து இறுகத் தழுவி அவனது முகத்தில் தனது முகத்தை வைத்து ஆசையோடு அழுத்தினாள். அதைக் கண்ட கலியான சுந்தரம் திக்பிரமை கொண்டு அது கனவோ நினைவோ என்று சந்தேகித்து, அந்தப்பெண் உண்மையில் மயக்கம் கொள்ளவில்லை என்றும், அவள் தன்மீது மோகம் கொண்டு தன்னிடம் ஸரஸ்லீலைகள் புரியத் தொடங்குகிறாள் என்றும் நிச்சயமாக உணர்ந்து, அந்த மகா விபரீதமான அபாய நிலைமையில் தான் என்ன செய்வது என்பதை அறியாமல் இரண்டொரு நிமிஷம் தனது உடம்பை அப்படியே விட்டிருந்தான். 26-வது அதிகாரம் இருவரும் கெட்டால், ஏச்சுமில்லை,பேச்சுமில்லை தாம் வேறே யாரோ ஒரு பெண்ணினது வருகையை எதிர்பார்த்திருக்கத் தமது தம்பியினது மகளான லீலாவதி வந்து தோன்றியதைக் கண்ட மருங்காபுரி ஜெமீந்தார் பிரமித்துப் போய்த் தாம் என்ன செய்வது என்பதையாவது, என்ன பேசுவது என்பதையாவது அறியாதவராய்க் கல்லாய்ச் சமைந்து