பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5 ஆசையினாலும் ஆவலினாலும் அவளது ஹிருதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது. தான் அவனை நினைத்து விரகவேதனைப்பட்டு உருகிக் கருகுவதைப்போல அவனும் தன்மேல் காதல் கொண்டு தன்னிடம் அதை வெளியிட விரும்புகிறான் என்று நினைத்துக்கொண்ட அம்மாளு தான் எளிதில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று உடனே எண்ணிக் கொண்டாள். அவளது உடம்பு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் தென்றல் காற்றில் அசையும் மாந்தளிர் போல நடுங்குகிறது. மார்பு விம்மி விம் மி தணிகிறது. அடிக்கடி நெடுமூச்சு உண்டாகிறது. கைகால்களும் மற்ற அங்கங்களும் கட்டிலடங்காமல் பதறிப் பறக்கின்றன. அந்த நிலைமையிலும் அந்த வடிவழகி, அவனை நோக்கி ஆகா! அப்படியானால் என்னுடைய பாக்கியமே பாக்கியம் கும்பிடப் போன தெய்வம் குறுக் கிட்டு வரம் கொடுத்ததுபோல, என் எண்ணம் வெகுசுலபத்தில் முடிவடையப் போவதைக் காண என் மனம் பூரித்துப் பரவசமடைகிறது. இடமும் சந்தர்ப்பமும் ஏற்றதாகவே இருக்கின்றன. நம்முடைய மனிதர் எல்லோரும் திரும்பிவர சாயுங்காலம் வரையில் பிடிக்கும். அதற்குள் நாம் சுயேச்சையாக இருக்கலாம்” என்றாள். அவளது சொற்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஈட்டிகளால் குத்துவதுபோல அவனது செவிகளில் நுழைந்து அவனது மனதைப் புண்படுத்தின. அவன் நிரம் பவும் விசனித்துக் கலங்கினவனாய் அவளை நோக்கி, 'அம்மாளு! உன் விஷயத்தில் என் மனம் படும்பாட்டை நான் எப்படி வெளியிடப் போகிறேன்!” என்று கூறிச்சிறிது நிறுத்தினான். உடனே அம்மாளு கரைகடந்த மகிழ்ச்சியும் வசீகரமான புன்னகையும் கொண்டு இரண்டோரடி நடந்து அவனிடம் நெருங்கி வந்து, "பரஸ்பரம் என் மனமும் அப்படியேதான் உங்களைக் கண்ட முதல் இதுவரையில் வதைபட்டுக்கொண்டு இருக்கிறது. நான் இப்போது இங்கே வந்து உங்களோடு