பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97

அதைக்கேட்ட போலீஸ் கமிஷனர் நிரம்பவும் புரளியாகப் பேசத் தொடங்கி, “ஒகோ உம்மை அடித்து வற்புறுத்தப் போகிறோம் என்று நீர்நினைத்துக் கொண்டிருக்கிறீரா? நாங்கள் இரண்டோர் அடி கொடுத்தால், உமக்கு உடனே ஸ்மரணை தப்பிப்போகும். அதற்குமேல் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது உமக்குத் தெரியப் போகிறதில்லை. ஆகையால், உம்மை அடித்து உபத்திரவிப்பதனால், காரியம் பலிதமடையப் போகிறதில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், நாங்கள் உம்முடைய விஷயத்தில் இன்னொரு புதிய மருந்து உபயோகப்படுத்தப் போகிறோம். அது இன்னதென்று நீர் தெரிந்துக் கொள்ளப் பிரியப்பட்டால், அதையும் வெளியிடத் தடையில்லை’ என்றார். கலியான சுந்தரம், ‘இனி நான் உங்களிடம் எதையும் கேட்கப் பிரியப்பட வில்லை; நீங்கள் சொல்வதைச் சொல்லலாம்; செய்வதைச் செய்யலாம்’ என்று நிரம்பவும் அசட்டையாக மறுமொழி கூறினான்.

&

போலீஸ் கமிஷனர், ‘ஐயா! நான் சொல்வதை நீர் நிரம்பவும் அற்பமாக மதித்து அலட்சியமாகப் பேசுகிறீர். நான் விவரம் முழுவதையும் தெரிவித்தால், நீர் இப்படி அசட்டையாகவும் தைரியமாகவும் பேசமாட்டீர் என்பது நிச்சயம். அதையும் நான் சொல்லிவிடுகிறேன். இந்த ஊரில் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும் ஒரு இடத்தில் நிரம்பவும் பந்தோ பஸ்தான ஒரு கட்டிடம் இருக்கிறது. அதற்குப் பைத்தியக்காரர் வைத்திய சாலை என்று பெயர். அதன் உட்புறம் இரண்டு பாகங்களாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாகம் ஆண் பிள்ளைகளாலும் மற்ற பாகம் பெண் பிள்ளை களாலும் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆண்பிள்ளைகளின் கட்டிடத்தில் சுமார் பதினைந்து பைத்தியக்காரர்கள்தான் இப்போது இருக்கிறார்கள். பெண்பிள்ளைகள் இருக்கும் பாகத்தில் சுமார் இருநூறு பைத்தியக்கார ஸ் திரீகள்