பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 109 இப்படித்தான் ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்து என்னைப் பெருத்த மோசடியில் மாட்டிவிட்டாள். அதுபோலவே இதுவும் ஏதாவது மோசடியான சூழ்ச்சியா அல்லது உண்மையான விஷயமா?’ என்றான்.

அதைக்கேட்ட அந்தத் தாதி முன்னிலும் அதிகப் பணிவாக வும் மனப்பூர்வமாக உண்மையையே பேசுகிறவள் போலவும் காணப்பட்டு, ‘ஐயா! இந்தச் சிறைச்சாலையில் இதற்கு முன் யாரோ உங்கள்ை மோசடியில் மாட்டிவிட்டதாக இப்போதுதான் நீங்கள் சொல்ல நான் தெரிந்து கொள்ளுகிறேன். அதைப்பற்றிய விவரம் எனக்கு எதுவுமே தெரியாது என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். நான் இந்தச் சிறைச்சாலையைச் சேர்ந்த சிப்பந்தியல்ல. நான் வைத்திய இலாகாவைச் சேர்ந்தவள். இங்கேயுள்ள கைதிகளுக்கு ஏதேனும் தேக அசெளக்கியம் உண்டாகுமானால், அவர்களுக்கு வைத்தியம் செய்ய இந்த வைத்தியர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவியாக இருந்து நோயாளிகள் முற்றிலும் குணமடையும் வரையில் அவர்களுக்குரிய பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு என்னை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாங்கள் இருவரும் வைத்திய இலாகா அதிகாரியினால் நியமிக்கப்பட்டவர்கள். ஆகையால், நாங்கள் இந்தச் சிறைச்சாலைக்குள் வேறே எந்த விஷயத்தையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது. நோயாளிகள் சம்பந்தப்பட்ட வரையில் நாங்கள் கவனித்துக் கொண்டு அவ்வளவோடு போய்விடவேண்டும். ஆகையால், உங்களுடைய முந்திய வரலாறாவது, இதற்குமுன் உங்களுக்கு இவ்விடத்தில் என்ன இடைஞ்சல்கள் நேரிட்டன என்பதாவது எனக்குத் தெரியவே தெரியாது. நேற்றுப்பகல் வரையில் நான் உங்களைப் பற்றி எந்த விவரத்தையுமே தெரிந்து கொள்ள வில்லை. நேற்று காலையில் நான் என்னுடைய இவ்விடத்து அலுவல்களை முடித்துக்கொண்டு சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் போன காலத்தில், அவ்விடத்தில் இரண்டு புருஷர்கள் என்