பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 119 நம்பிக்கை கொள்ளமாட்டீர்கள் என்பதும் சகஜமே. இந்த விஷயம் போலீஸ் கமிஷனருக்குத் தெரிந்து போகுமானால் அதனால் கெடுதல் உண்டாகும் என்று நீங்கள் எப்படி பயப்படுகிறீர்களோ அதுபோலவே எங்களுக்கும் அது பயமாக இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து இந்தத்தேசம் நிரம்பவும் அதிக தூரத்தில் இருக்கிறது. ஆகையால், அங்கே இருந்து ஏராளமான மனிதரைப் பக்க பலமாக நாங்கள் அழைத்துவரமுடியவில்லை. இந்த ஊருக்கும் நாங்கள் புதியவர்கள். ஆகையால், எந்த மனிதரை நம்பலாம் எவரை நம்பக் கூடாது என்ற அனுபவம் எங்களுக்கு இல்லாதிருப்பதால் நாங்கள் இவ்விடத்தில் யாரையும் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால், எங்களுடைய சொற்ப பலத்தை வைத்துக்கொண்டே, நாங்கள் இந்தப் பெரிய காரியத்தை நிறைவேற்ற உறுதி செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, எங்களுடைய கருத்தை யாரும் அறிவதற்குள் காரியத்தை முடித்துவிட வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். ஆகையால், எங்களுடைய வரலாறு எதையும் கடிதத்தின் மூலமாகவாவது வாய் மூலமாகவாவது தெரிவிக்காமல் நாங்கள் கொஞ்சம் எச்சரிப்பாக நடந்துகொள்ள விரும்புகிறோம். எங்களைப்பற்றி நீங்கள் இப்போது சந்தேகப் படுவதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நம்முடைய எண்ணம் நிறைவேறிப் போகுமானால், அதன்பிறகு உங்களுடைய சந்தேகம் தானாகவே நிவர்த்தியாகிவிடும். இந்தக் கடிதம் கொண்டு வரும் அம்மாளோடு நாங்கள் பழகிப் பார்த்த வரையில் இவர்கள் நற்குணமும் உறுதியும் உள்ளவர் களாகத்தான் தெரிகிறது. இருந்தாலும், நீங்கள் எண்ணுவது போல நாம் எல்லோரிடத்திலும் அதிக முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வதே உசிதமானது. எவ்விதமான தந்திரம்செய்து உங்களை விடுவிக்கலாம் என்பதைப் பற்றி நாங்கள் பலவாறு யோசித்து வருகிறோம். எங்களுடைய முடிவான ஏற்பாட்டை பின்னால் தெரிவிக்கிறோம். இருந்தாலும், நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கடிதம் எழுதி இந்த அம்மாளின் மூலமாக