பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பூர்ணசந்திரோதயம்-4 தாதி குறிப்பிட்ட அடையாளங்களெல்லாம் அவர்களிடம் இருந்ததாக அவன் உணர்ந்து, தன்னை விடுவிப்பதற்காக வந்திருக்கும் மனிதரே அவர்கள் என்று ஒருவாறு நிச்சயப் படுத்திக் கொண்டான். தாதி தனது விரோதியின் கட்சியைச் சேர்ந்தவளல்ல என்றும், அவள் சொன்னதெல்லாம் உண்மை யென்றும் அவன் ஒருவாறு தீர்மானித்துக் கொண்டான். ஆனால், அவர்கள் இருவரும் எவ்விதமான தந்திரம் செய்து தன்னை விடுவிக்கப் போகிறார்கள் என்ற விவரம் தெரியாமையால், அவனது மனம் பலவிதமான சந்தேகங்களையும் யூகங்களையும் செய்துகரைகடந்த ஆவலும் பதைப்பும் கொண்டு வதைபட்டது. அவனது இருதயம் தடதடவென்று அடித்துக்கொண்டே இருந்தது. உடம்பு பதறிப் பறந்தது.

அந்த நிலைமையில், பெட்டி வண்டி எதிரில் தோன்றிய சிறிய பேட்டையை அடைந்தது. அவ்விடத்தில் பெட்டி வண்டியின் குதிரைகள் மாற்றப்பட்டன. அவ்விடத்தில் அவர்கள் கால் நாழிகை சாவகாசத்திற்குமேல் அதிகம் தாமதிக்காமல் உடனே புறப்பட்டு விட்டனர். பெட்டிவண்டி நிரம்பவும் விசையாகச் சென்றது. மேலும் அரைமணி நேரம் கழிந்தது. குதிரைகள் மாற்றப்பட்ட பேட்டை வெகுதூரம் பின்னால் போய்விட்டது. அப்போது அவர்கள் சென்ற பாதையின் இருபுறங்களிலும் கண்கண்ட துரம் வரையில் பொட்டல் வெளியே தோன்றியது. ஆகையால், எங்கு பார்த்தாலும் ஒரே வெளியாகத் தோன்றிய தன்றி பச்சைப் பசேலென்று தோன்றிய ஆகாய வட்டம் நாற்புறங்களிலும் குடைகவிந்ததுபோலப் பூமியைப் தொட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஆகாயத்தில் சந்திரன் மாசு மறுவற்று நிரம்பவும் கம்பீரமாக ஜ்வலித்துக் கொண்டிருந்தது. ஆகையால், அதன் தெளிவான நிலவு அந்த விகாரமான பொட்டல் வெளியில் படிந்து ஆங்காங்கு தோன்றிய மொட்டை மரங்கள், குட்டைப் புதர்கள், முட்செடிகள், முதலிய வற்றிலிருந்து சிறிய சிறிய நிழல் உண்டாகும் படி செய்து