பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O பூர்ணசந்திரோதயம் -4 உயிரோடிருக்கிறாரா, அல்லது இறந்து போய்விட்டாரா என்பதாவது இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை. அந்த ஜெமீந்தாருக்கு ஒரு பிள்ளை இருக்கிறார். அவர் தம்முடைய தகப்பனார் திடீரென்று ஆச்சரியகரமாகவும் பூடகமாகவும் மறைந்துபோய் விட்டதைப் பற்றிக்கரைகடந்த விசனமடைந்து, தமது தகப்பனாரை இந்த உலகம் முழுதிலும் தேடிப்பார்த்து விட்டார். அவருடைய துயரம் இன்னமும் மாறாமலேயே இருந்து வருகிறது. ஒரு மாசத்துக்குமுன் அவர் என்னிடம் வந்து தம்முடைய தகப்பனார் திடீரென்று காணாமல் போன வகையையும், அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கும் படி நிரம் பவும் கேட்டுக் கொண்டார். அது முதல் நான் இதே வேலையாக இரவு பகல் அலைந்து திரிந்து எத்தனையோ பாடுபட்டுப் பார்த்துவிட்டேன். என்னுடைய முயற்சிகள் பலிக்கவே இல்லை. காணாமல் போன ஜெமீந்தாரைப் பற்றிய தகவல் எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால், இன்று காலையில் ஒரு புலம் அகப்பட்டது. அதை வைத்துக்கொண்டு உண்மையைக் கண்டுபிடிக்கலாம் என்ற ஒர் எண்ணம் உண்டாயிற்று’ என்றார்.

தன்னால் வெந்நீர் அண்டாவுக்குள் வைத்துக் கொல்லப் பட்ட ஜெமீந்தாரைப் பற்றிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுவார் என்று லீலாவதி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால், அவள் திடுக்கிட்டு திகில் கொண்டு பிரமித்துத் தனது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டாள். தான் உடனே அவருக்கு மறுமொழி சொல்லாதிருப்பதைப் பற்றி அவர்தன்மீது ஏதேனும் சந்தேகம் கொள்ளப் போகிறாரோ என்ற நினைவினால் அவள் இரண்டொருதரம் நினைத்துக் கொண்டாள். இருந்தாலும், அவர் தன்னைக் கபடமாகப் பார்க்கவில்லை என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. ஆகையால், தான்துணிந்து பேசலாம் என்ற தீர்மானத்தோடு அவள் அவரைப் பார்த்து, ‘ஆம் ஐயா! நீங்கள் குறித்துப் பேசும் விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது? பவானியம்மாள்புரம்