பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பூர்ணசந்திரோதயம்-4 எனக்கு நன்றாகத் தெரியும். என்னிடத்தில் நீ மனப் பூர்வமான வாஞ்சையும் பயபக்தி விசுவாசமும் வைத்திருக்கிறாய் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை என்று நீ எண்ணிக் கொண்டாயா? அப்படி நினைக்காதே; உன்னுடைய உண்மை யான பெருமையும் யோக்கியதையும் எப்படிப் பட்டவை என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். நீ இப்போது நடந்த மாதிரியை நான் குற்றமாகக் கொள்ள மாட்டேன். அப்படி நீ என் விஷயத்தில் யாதொரு தவறும் செய்ததாகத் தோன்ற வில்லை. ஆகையால், அந்த வார்த்தையை இவ்வளவோடு விட்டுவிடு. ஏன் நீ இன்னமும் அன்னிய ஸ் திரீபோல அவ்வளவு தூரத்தில் நிற்கிறாய்? இங்கே வந்து என் பக்கத்தில் உட்கார்ந்துகொள். நீ கேட்டுக்கொண்ட நிபந்தனையை நான் பூர்த்தியாக நிறைவேற்றி விட்டேன். இனி நீ உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதைத் தவிர வேறு எவ்வித முகாந்திரமும் சொல்வதற்கில்லை. முதலில் நீ இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்துகொள். நீதத்தளித்து நிற்பதைப் பார்க்கப் பார்க்க என் மனம் பரிதவிக்கிறது. நானே வந்து ஒரு செல்லக் குழந்தையைத் தூக்குவதுபோல உன்னைத் தூக்கி எடுத்துக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்காரவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பிரியம் என் மனசில் உண்டாகி என்னைத் தூண்டுகிறது. ஆனாலும், அது உன் மனசுக்கு எப்படி இருக்குமோ என்ற நினைவினால், நான் கொஞ்சம் மலைக்கிறேன். இந்த இரண்டுமாச காலத்தில் ஒர் இமைப் பொழுதும் நான் உன்னை மறந்திருப்பேன் என்று நினைக்கிறாயா? உன்னைப் போல ஒரு படம் எழுதச் செய்து நான் இரவு பகல் அதைக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தேனன்றி, வேறே எப்படிப்பட்ட அவசர விஷயங்களிலும் கூட நான் என் கவனத்தைச் செலுத்தவில்லை. உன்னுடைய படத்துக்கு நான் ஒரு நாளைக்குள் எத்தனை ஆயிரம் முத்தங்கள் கொடுத்திருப்பேன் தெரியுமா? உன் படத்துக்கு உயிரிருப்பதாக எண்ணி நான் அதோடு எத்தனை தரம் கொஞ்சிக் குலாவி