பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பூர்ணசந்திரோதயம்-4 பார்த்தவரையில் அவர்கள் நிரம்பவும் நல்ல குணமும் சுத்தமான நடத்தையும் உள்ளவர்களாகவே காணப்பட்டார்கள். அவர்கள் இவ்வளவு சொற்ப காலத்திற்குள் இப்படி அடியோடு புது மனிஷியாக மாறிப்மோவார்கள் என்று யாரும் எதிர்பார்த்தே இருக்கமாட்டார்கள். இப்போது தங்களுடைய மாமனார் நோய் கொண்டு படுத்திருப்பதைக் கருதி அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற காரணத்தை முன்னிட்டு அவர்கள் தஞ்சையிலிருந்து இங்கே வந்தபிறகு, அவர்களுடைய உண்மையான குணமும் மனப் போக்கும் உள்ளபடி தெரிந்தன. அவர்கள் தஞ்சையில் தங்களோடு இருந்த சுமார் நாலைந்து வருஷ காலத்தில் அவர்கள் பலவிதமான துன்மார்க்கங்களில் தம்முடைய மனதைச் செலுத்தி இருந்ததன்றி, தங்களுடைய அதிருப்தியைப் பூர்த்தியாகச் சம்பாதித்துக் கொண்டிருப்ப தாகவும் தெரிகிறது. அதுவுமல்லாமல், சென்ற இரண்டு வருஷ காலமாக அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்விதமான தேக சம்பந்தமும் நேரிடவில்லையென்று நான் கேள்வியுற்று அவர்கள் விஷயத்தில் தாங்கள்தான் முற்றிலும் கொடுமையாக நடந்து கொள்ளுகிறீர்கள் என்று இதுவரையில் நான் தங்கள் விஷயத்தில் தப்பான அபிப் பிராயம் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் இங்கே வந்தபிறகு நான் சில மாத காலமாக அவர்களோடு பழகி அவர்களுடைய அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் அறிந்துகெண்ட பிறகு நான் என்னுடைய பழைய அபிப்பிராயத்தை எல்லாம் அறவே மாற்றிக் கொண்டேன்.

3. தங்களுடைய மாமனார் மகா கொடுமையான நோயில் பட்டு, படுத்தபடுக்கையாக இருக்கும் இந்தத் தருணத்தில் அவர் விஷயத்தில் இரக்கமும் அனுதாபமும் காட்டி அவர் பிழைப்பதற்கு வேண்டிய சிகிச்சைகளையும் உபசரணை களையும் மற்ற எல்லோரும் செய்து இரவு பகல் பாராமல் அரும்பாடு பட்டிருக்க, நோயாளியின் ஏகபுத்திரியான லலித