பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 179 குமாரி தேவியார் மாத்திரம் அவரைக் கண்ணாலும் பாராமல் தமது ஏகாந்த ரதிகேளிவிலாசத்திலிருந்து இரவு பகல் தனது ஆசை நாயகரோடு ஸரஸ் ஸல்லாபம் செய்து குதூகலமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை நாயகர் இன்னார் என்பதை ஒருவேளை இதற்கு முன்னாகவே தாங்கள் அவ்விடத்திலேயே தெரிந்து கொண்டிருக்கலாம்; அல்லது தெரிந்து கொள்ளாமலே இருக்கலாம். தங்கள் பட்டமகிஷியின் அந்தப்புரத்துக் காரியங்களை நடத்தி வரவு செலவுக் கணக்குகள் வைக்கும் மணியக்கார உத்தியோகத்தை வகித்திருப்பவரான மோகனராவ் என்பவரைத் தாங்கள் இதற்கு முன் பார்த்திருப் பீர்களோ என்னவோ தெரியவில்லை. அவருக்குச் சுமார் முப்பது வயதிருக்கலாம். பார்வைக்கு அவர் நல்ல அழகும் வசீகரமான முகத் தோற்றமும் உடையவராக இருக்கிறார். தாங்கள் அப்பேர்ப்பட்ட யெளவனப் பருவப் புருஷரை அந்த உத்தியோகத்தில் வைத்ததே அடிப்படையான தவறு என்று நினைக்கிறேன். அங்கே இருக்கும்போது அவர்கள் இருவருக்கும் கள்ள நட்பு ஏற்பட்டுப் போயிருக்க வேண்டு மென்பது சந்தேகமறத் தெரிகிறது. லலிதகுமாரிதேவி இப்போது ஒன்பது மாதக் கர்ப்பிணியாக இருக்கிறாள். பிரசவம் இன்றைக்கோ நாளைக்கோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கர்ப்பிணி யாக இருப்பதை இந்த ஊரிலுள்ள தாதிகள் அறிந்து கொள்ளக் கூடாதென்று யோசனைசெய்து, தஞ்சைக்கு எழுதி நான்கு புதிய தாதிகளை வரவழைத்துத் தங்கள் பட்டமகிஷிதமக்கருகிலேயே வைத்துக்கொண்டு மற்றவர்களை அருகில் நெருங்க விடாமல் தூரத்திலேயே வைத்திருப்பதாகவும் தெரிகிறது. தஞ்சையிலிருந்து வந்துள்ள தாதிப் பெண்களுக்கு லலிதகுமாரி தேவியின் ரகசியங்களெல்லாம் நன்றாகத் தெரியும். மற்றபடி எங்கள் மகாராஜா முதற்கொண்டு வேறு யாருக்கும் இந்த மர்மம் எதுவுமே தெரியாது. எந்தச் சமயத்தில் பிரசவம் நேருமோவென்று நினைத்து இவர்கள் பலவகையான