பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - பூர்ணசந்திரோதயம்-4 அவள் யாரோ என்றும், எதற்காக அவ்வாறு ஒடி ஒளிந்து கொள்ளுகிறாளோ என்றும், போலீசார் அவளைத்தான்துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்களோ என்றும் ஷண்முகவடிவு பலவாறு எண்ணமிட்டவளாய்க் கலக்கமும் திகிலுமே வடிவாகக் குன்றிப்போய் சுவரோடு சுவராக ஒளிந்திருக்க, அடுத்த rணத்தில் போலீசாரினது கூக்குரல் நிரம்பவும் சமீபத்தில் நெருங்கியது. அவர்களுள் ஒருவன், “அடேய் அவள் நேராய்ப் போகவில்லையடா; இந்தச் சந்திற்குள்தாண்டா நுழைந்தாள்; ஒடுங்கடா, துரத்துங்கடா என்றான். மற்றவர்கள் ‘பிடி பிடி விடாதே விடாதே’ என்று ஆர்ப்பரித்துப் பெரு முழக்கம் செய்துகொண்டு அந்தச் சந்திற்குள் நுழைந்தனர். அவர்கள் எல்லோரும் தத்தம் கையில் ஒவ்வொரு லாந்தரும் ஒவ்வொரு பெருத்த குண்டாந்தடியும் வைத்திருந்தனர். ஒரு ஜெவான் மாத்திரம் தனது கையில் ஒருசிறியதுணி மூட்டையை வைத்திருந்தான். -

அவ்வாறு கலவரமடைந்து ஆரவாரம் செய்தவர்களாய் அந்தச் சந்திற்குள் புகுந்த போலீசார்தங்களது பார்வையை நெடுந்துாரம் வரையில் செலுத்திப் பார்த்தனர். சற்றுமுன் சந்திற்குள் புகுந்த பெண்பிள்ளை அதன் கோடிவரையில் காணப்படவில்லை. ஆதலால், அவ்வளவு சீக்கிரத்தில் அவள் எங்கே போய் மறைந்து கொண்டிருப்பாள் என்று அதிசயித்தவர்களாய், குபிரென்று தங்களது விளக்குகளை இரண்டு பக்கங்களிலும் திருப்பித் திண்ணைகளைப் பார்க்கத் தொடங்கினர். உடனே ஒருவன், ‘'அடேய் ஆசாமி அதோ ஒளிந்து கொண்டிருக்கிறாள். பாருங்கடோய்! திருட்டுநாரி பச்சை உடம்போடஎன்ன ஓட்டம் ஒடி இதுக்குள்ளே இங்கே வந்து பதுங்கிக் கொண்டிருக்கிறாள் பாருங்கடா என்றான். உடனே எல்லோரும் தங்களது. திருஷ்டியையும் விளக்கையும் ஷண்முகவடிவென்னும் உத்தமி ஒளிந்துகொண்டிருந்த இடத்தில் திருப்பினர். உடனே ஒருவன் ‘அடி கொலைபாதகீ கீழே இறங்கி வாடீ! இந்த வீட்டுத்