பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O பூர்ணசந்திரோதயம்-4 மரியாதையாக எழுந்து இப்படி வந்துவிடு இல்லாவிட்டால் நாங்கள் கிட்டவந்து உன்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக நேரும் ‘ என்று அதட்டிக் கூறினான். உடனே இன்னொருவன் இரக்கமாகவும் பரிதாபகரமாகவும் பேசுகிறவன் போல நடித்து, ‘'அடேய் ! கிட்டப் போய் அவளைத் தொடாதேயடா தீட்டுடா இவள் பிள்ளைபெற்று இன்னம் அரை நாழிகை நேரங்கூட ஆகி இருக்காது.டா! பச்சை உடம் படா பாவம் தொட்டுப் பலவந்தமாக

இழுக்காதீர்களடா’ என்றான்.

மூட்டையைக் கையில் வைத்திருந்த மனிதன், ‘ஐயோ பாவம் குழந்தை எம்பிட்டு அழகாயிருக்கிறதடா இந்தக் குழந்தையினுடைய கழுத்தைத் திருகிக் கொல்ல இந்தச் சண்டாளிக்கு எப்படித்தான் மனம் துணிந்ததோ தெரிய வில்லையே! குழந்தை கந்தருவக் குழந்தைக் கணக்கா யிருக்கிறதடா எவ்வளவு சீக்கிரத்தில் குழந்தையைக் கொன்று கந்தைத்துணியில் மூட்டைக்கட்டி அடுத்த சந்து முனையில் வைத்துவிட்டு ஓடிவந்திருக்கிறாள். இந்தப் பச்சை உடம்போடு இவ்வளவு தூரம் குதிரை ஓட்டமாக ஓடி வந்திருக்கிறாளே! இவளை ராrசி யென்றுதான் சொல்லவேண்டும்” என்றான். அதற்குள் விளக்கைக் கொண்டுபோய் அவளது முகத்துக்கு அருகில் பிடித்த ஒருவன், ‘ஆ1 குட்டி வெகுலொகுசாக இருக்கிறாளடா தேவிடியாள் வகுப்பைச் சேர்ந்தவள் போலிருக்கிறது’ என்றான்.

அவர்கள் கூறிய வார்த்தைகளெல்லாம் ஷண்முகவடிவிற்கு முற்றிலும் கன்னகடுரமாக இருந்தன. சிவசிவா இப்படிப் பட்ட அசங்கியமான சொற்களை என் காதால் கேட்கவும் தலைவிதியா ஐயோ தெய்வமே! என்னென்ன புதுமை புதுமையான சங்கடங்களுக்கெல்லாம் என்னை ஆளாக்கு கிறாய் ‘ என்று அந்த மின்னற் கொடியாள் தனக்குத்தானே எண்ணிக் கலங்கி மனமுடைந்தவளாய் மெல்ல எழுந்து