பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பூர்ணசந்திரோதயம்-4 ஆட்சேபனை யும் இல்லை. அதுவரையில் நாங்கள் சட்டப்படி நடத்த வேண்டிய நடவடிக்கைகளை எல்லாம் செய்து தான் தீர வேண்டும்; இப்போது நீ எங்களோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டும். அவ்விடத்தில் மருத்துவச்சிகளைக் கொண்டு உன் உடம்பைப் பரீட்சிக்கச் செய்ய வேண்டும். அப்போது உண்மை எளிதில் விளங்கிவிடும். அதுவுமன்றி, உன்னுடைய அக்காள் யார் வீட்டிலேயோ இருப்பதாக நீ சொல்லுகிறா யல்லவா; அதையும் நாங்கள் ஒரு நிமிஷத்தில் விசாரித்து உன்னுடைய உண்மையான வரலாற்றை வெகு சுலபத்தில் கண்டுபிடித்து விடுகிறோம். நீ இனி அநாவசியமாக எங்களோடு பேசிக் காலதாமதம் செய்வதில் உபயோகமே இல்லை. வா, இப்படி, நட எங்களோடு’ என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூற, அதன் கருத்திற்கிணங்க, சில ஜவான்கள் அவளண்டை நெருங்கி, “போ, போ; ஏன் நிற்கிறாய்? நாங்கள் உன்னைத் தொடும்படியாக வைத்துக் கொள்ளாதே’ என்று நயமாகவும் உறுதியாகவும் கூறி அவளை மூன்று பக்கங்களில் வளைத்துக்கொண்டு கிட்ட நெருங்கி வர, அந்த மடமங்கை என்ன செய்வாள் பாவம்; தனது வாயைத் திறந்து பேசவும் லஜ்ஜையடைந்தவளாய்க் கீழே குனிந்தபடி நடந்து திண்ணையைவிட்டுக் கீழே இறங்கி நடக்கலானாள். போலீசார் அவளைச் சூழ்ந்து நடந்தவர்களாய் அவளைப் போலீஸ் ஸ்டேஷன் இருந்த திக்கில் நடத்திச் சென்றனர். அவ்விடத்தில் கூடியிருந்த ஜனங்கள் அந்த வழக்கின் உண்மை இன்னதுதான் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர். பலர்தத்தம் வீடுகளுக்குச் சென்றனர்; சிலர் போலீசாரைத் தொடர்ந்து ஸ்டேஷன் வரையில் போய், அவர்களால் துரத்தப்பட்டுத் திரும்பினர்.

போலீசார் உத்தமோத்திமியான நமது ஷண்முகவடிவை அழைத்துக்கொண்டு குழந்தையின் பிரேத மூட்டையோடு போலீஸ் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தனர். நிரபராதியான ஷண்முகவடிவு வெட்கமும் துக்கமும் கரைகடந்து ததும்ப