பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 23

நீங்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த அசந்தர்ப்ப வேளையில் நான் வந்து எழுப்ப நேர்ந்ததைப்பற்றி நிரம்பவும் விசனிக்கிறேன். இதோ நிற்கும் இந்தப் பெண் தன்னுடைய தமக்கை இந்தத் தெருவில் 13வது இலக்கமுள்ளவீட்டில் இருப்ப தாகவும், தன்னை அழைத்துக்கொண்டு வந்து இங்கே விட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாள். அதற்காக இங்கே வந்தேன். வேறொன்றும் விசேஷமில்லை. இதுதானே 13வது இலக்கமுள்ள வீடு?” என்றார்.

வீட்டுக்காரர், ‘இதுதான் 13வது இலக்கமுள்ள வீடு. இந்தப் பெண்ணின் தமக்கையின் பெயரென்ன? எங்களைத் தவிர இங்கே வேறு யாரும் இல்லையே! என்றார்.

இன்:- இந்தப் பெண்ணின் தமக்கையின் பெயர் கமலமாம். இவர்களுடைய ஊர்திருவாரூராம். கமலம் இந்த ஊருக்கு வந்து சுமார் ஏழெட்டுமாதகாலமாகிறதாம். இந்த வீட்டில் இருப்பதாக கமலம் இந்தப் பெண்ணுக்குக் கடிதம் எழுதி இருக்கிறாளாம்.

வீட்டுக்காரர்:- (வியப்படைந்தவர் போலத் தோன்றி) கமலம் என்ற பெயருடைய பெண் இங்கே யாருமில்லையே! இது எங்களுடைய சொந்த வீடு. இவ்விடத்தில் வேறே யாரும் குடியிருப்பது கூட இல்லை. அதுவுமன்றி எங்களுக்குத் திருவாரூரில் யாரும் சொந்தக்காரரே இல்லை. இந்தப் பெண்ணும் எனக்குத் தெரியாது. ஒருவேளை இந்தப் பெண் தெருப் பெயரையோ, அல்லது கதவிலக்கத்தையோ ஞாபகப் பிசகாகச் சொல்லியிருக்கலாம் - என்றார்.

உடனே ஷண்முகவடிவு முன்னால் வந்து, ‘இல்லை; இல்லை நான் ஞாபகப் பிசகாகச்சொல்லவில்லை. என்அக்காள் எழுதிய கடிதங்களெல்லாம் இதோ என் மடியிலேதான் இருக்கின்றன. இவைகளில் இந்த விலாசம் தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. எங்களுடைய மனிதர் ஒருவரும் இதற்குமுன் வந்து இந்த வீட்டில் என் அக்காளோடு பேசிவிட்டு