பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பூர்ணசந்திரோதயம்-4 யிருக்கலாம். உடனே அவன் அவள் இருக்கும் உண்மையான இடத்தைச் சொல்லி இருக்கலாம்; அல்லது வேறு எப்படி யாவது இருக்கலாம். எல்லாவற்றிற்கும் அவரையும் வைத்துக் கொண்டுதான் விசாரிக்க வேண்டும்’ என்றாள்.

அதைக் கேட்ட இன்ஸ் பெக்டர், ‘'சரி; அப்படியானால் நாங்கள் போய்த் தபால்காரனிடம் விசாரித்துப் பார்த்தால், உண்மை உடனே விளங்கிப் போகும் என்பது உங்களுடைய கருத்தல்லவா? சரி; அப்படியே செய்கிறோம். இந்த விலாசம் போட்டு கமலம் என்று வந்த கடிதங்களை அவன் இங்கே கொடுத்தானா, அல்லது வேறே எங்கே கொடுத்தான் என்று அவனிடம் கேட்டால், அவன் உடனே உண்மையைச் சொல்லிவிடுவான். அதற்குமேல் மற்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுகிறேன்” என்றார்.

அம்மனிபாயி நிதானமாகவும் அலட்சியமாகவும் பேசத் தொடங்கி, ‘அப்படியே செய்யுங்கள். அதுதான் நல்ல யோசனை. ஆனால் ஒரு சந்தேகம். இவ்வளவு தூரம் ஏற்பாடு செய்து தபால்காரனை அவன் கையில் போட்டுக் கொள்வதென்றால், அவனுக்கு ஏதாவது லஞ்சம் கொடுத்தி ருப்பாள் அல்லவா? அப்படியிருக்க, போலீசாராகிய நீங்கள் போய் விசாரித்தால், அவன் உடனே சந்தேகப்பட்டு உண்மையை மறைத்து விடலாம் அல்லவா. “எத்தனையோ கடிதங்கள் வருகின்றன. யார் யாருக்கு வருகின்றன என்பதையும் எங்கெங்கே கொடுக்கிறேன் என்பதையும் நான் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும் ‘ என்று அவன் சொன்னால், அதற்குமேல் நீங்கள் அவனை வற்புறுத்த முடியுமா?’ என்றாள்.

இன்ஸ்பெக்டர், ‘அதுவும் வாஸ்தவந்தான். அவன் அநேகமாய் அப்படித்தான் சொல்லலாம். இருக்கட்டும். நாங்கள் தந்திரமாக விசாரித்துப் பார்க்கிறோம். அவன் சரியானபடி உத்தரம் சொல்லாவிட்டால், இந்த விஷயத்தைச்