பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பூர்ணசந்திரோதயம்-4 அடையாளப் பிசகாக என்னைக் காட்டுகிறாள் என்றே நினைக்கிறேன்’ என்று அழுத்தமாகக் கூறினாள்.

இன்ஸ்பெக்டர் உடனே ஷண்முகவடிவைப் பார்த்து, “ஏனம்மா சங்கதிகளைக் கேட்டுக்கொண்டாயா? இனி நாம் என்ன செய்கிறது? இந்த அர்த்த ராத்திரியில் நாம் யாரையும் எழுப்பித் தொந்தரவு செய்வது நியாயமல்ல. ஆகையால், நாம் போவோம்; பொழுது விடிந்தபிறகு இந்த விஷயத்தைத் தீர விசாரித்து உண்மையை அறியலாம். உன்னுடைய அக்காளான கமலம் இருக்கும் இடத்தை நான் நாளையதினம் சாயுங்காலத்துக்குள் எப்படியும் கண்டுபிடித்து உன்னை அவரிடம் சேர்க்கிறேன்; நீ கவலைப்படாதே. வாபோகலாம்” என்றார்.

உடனே அம்மணிபாயி, “நான் உள்ளே போகலாமல்லவா? உங்களுக்கு இன்னமும் ஏதாவது சங்கதி தெரியவேண்டுமோ?” என்றாள்.

இன்ஸ்பெக்டர் மரியாதையாக, ‘இல்லையம்மா! நீங்கள் கதவை மூடிக் கொண்டு உள்ளே போங்கள். நாங்களும் போகிறோம்” என்றார்.

உடனே அம்மணிபாயி கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டாள்.

இன்ஸ்பெக்டர், ‘சரி, வாஅம்மா போகலாம்” என்று கூறிய வண்ணம் அவ்விடத்தைவிட்டு நடக்க, ஷண்முகவடிவு அவரைத் தொடர்ந்து செல்லலானாள்.

இருவரும் மெளனமாகவே நடந்து அந்தத் தெருவைக் கடந்து அப்பால் சென்றனர். இன்ஸ்பெக்டர் ஆழ்ந்து சிந்தனை செய்து தமது கவனத்தை ஏதோ விஷயத்தில் செலுத்தியவராய் நடக்க, ஷண்முகவடிவு வியப்பும், பிரமிப்புமே வடிவெடுத்தவள் போலவும் சொப்பனத்தில் நடப்பவள் போலவும் அவருக்குப்