பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 24 பின்னால் போய்க் கொண்டிருந்தாள். அம் மாணி பாயின் அடையாளமும், அவள் இருந்த வீட்டின் அடையாளமும், அவளுக்கு நன்றாக நினைவிருந்தன. ஆகையால், அம்மணிபாயி சொன்னது முழுப் புரட்சி என்பது ஷண்முக வடிவிற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல நிச்சயமாகத் தெரிந்தது. அவள் தனக்கு ஒன்றும் தெரியாதென்று முழுப் பூசனிக்காயை இலைச் சோற்றில் மறைப்பது போல அடியோடு எல்லாவற்றையும் மறைத்துப்பேசி, தன்னை முற்றிலும் பொய்யளாக்கி விட்டதை நினைத்துநினைத்து நமது இளமாது கட்டுக் கடங்கா ஆச்சரியமும் கலக்கமும் அடைந்தாள். தனது அக்காளை அவர்கள் என்ன கதிக்கு ஆளாக்கி இருப்பார்களோ என்ற கவலையும் அச்சமும் தோன்றி அவளது மனதில் குடி கொண்டன. இன்ஸ்பெக்டர் தன் விஷயத்தில் என்னவிதமான அபிப்பிராயம் கொண்டிருப்பாரோ என்ற கவலையும் பெரிதாக எழுந்து வதைத்தது. அங்ஙனம் அவள் பலவாறு சஞ்சல மடைந்தவளாய் நடக்க, அடுத்த வீதி வந்து சேர்ந்தது. இன்ஸ்பெக்டர் உடனே பின்னால் திரும்பிப் பார்த்து யாரும் வரவில்லையென்பதை நிச்சயித்துக்கொண்டு அன்பான குரலில் பேசத்தொடங்கி, ‘அம்மா ஷண்முகவடிவூ! நீ சொல்வது நிச்சயந்தானா? இந்தப் பெண்பிள்ளை தான் உன்னை வஞ்சித்தவள் என்பது உனக்கு நன்றாகத் தெரிகிறதா? நீ கோலாப்பூரிலிருந்து வந்து இந்த வீட்டிலேதான் இறங்கினாயா? நன்றாக எண்ணிப் பார்த்துச்சொல்’ என்றார்.

ஷண்முகவடிவு விசனகரமான குரலில், “நான் என்னவென்று சொல்லுவேன். இதே பெண்பிள்ளை என்னைக் கோலாப்பூரி லிருந்து அழைத்துக்கொண்டு இந்தவீட்டுக்கு வந்தாள். இங்கே இருந்து வடக்கு வீதியிலுள்ள மாளிகையில் கொண்டுபோய் விட்டாள்; இப்போது தனக்கு ஒன்றும் தெரியாதென்று அடியோடு மறுக்கிறாள். வாயடி அடிக்கிறவர்களுக்குத்தான் இது காலமாக இருக்கிறது; என்ன செய்கிறது?” என்றாள்.