பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பூர்ணசந்திரோதயம்-4 ஷண்முகவடிவு, ‘நீங்களும் இப்போது அங்கே போய்ப் படுத்துக்கொள்ளப்போகிறீர்களா?’ என்றாள்.

கிழவி, ‘ஆம்; இரண்டாங்கட்டும் இதைப்போலவே நிரம்பவும் பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அவ்விடத்தில் ஏராளமான அறைகளும் விடுதிகளும் இருக்கின்றன. நான் படுத்துக்கொள்ளுமிடம் அங்கேதான் இருக்கிறது. நீ என்ன செய்யப்போகிறாய்? கொஞ்சநேரம் இங்கே இருந்துவிட்டுப் புறப்பட்டுப் போகப் போகிறாயா? அல்லது, பொழுது விடிகிற வரையில் இங்கேயே படுத்துத் துரங்கிவிட்டு விடிந்தபிறகு போக உத்தேசித்திருக்கிறாயா?” என்றாள்.

ஷண்முகவடிவு, ‘இப்போது இரவு சுமார் மூன்று மணி சமயமிருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தச் சண்டையைப் பார்த்தபிறகு எனக்கு வெளியில் போக பயமாக இருக்கிறது. இந்த முன்கட்டிலேயே நான் படுத்திருக்க நீங்கள் அனுமதி கொடுத்தால் படுத்திருந்துவிட்டு, பொழுது விடிந்தவுடன் நான் போகவேண்டிய இடத்துக்குப் போய்விடுகிறேன். நீங்கள் என் பொருட்டு இன்றைய தினம் மாத்திரம் எனக்குத் துணையாக இந்த முதற் கட்டிலேயே தயை செய்து படுத்துக் கொள்ள வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன். என்றாள்.

கிழவி:- உன் பெயரென்ன?

ஷண்முக:- என் பெயர் ஷண்முகவடிவு.

கிழவி: - உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? நீ இந்த அர்த்த ராத்திரியில் தனியாகப் புறப்பட்டு இந்த வீதியில் வரவேண்டிய பிரமேயமென்ன? -

ஷண்முக:- அம்மா எனக்கு இந்த ஊரில் வீடு இல்லை. என்னுடைய சொந்த ஊர்திருவாரூர். இந்த ஊரில் எங்களுடைய மனுஷ்யாள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு என் அக்காள் இந்த ஊருக்கு வந்து சுமார் ஏழெட்டு மாசமாகிறது. அவள் எங்களுடைய ஊருக்குத்