பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பூர்ணசந்திரோதயம்-4

ரகசியம்

ஜன்னலுக்குள் போடப்பட்ட கடிதம் வந்து சேர்ந்தது. நான் தஞ்சைக்கு எழுதிய கடிதங்களை மதித்து நீங்கள் இவ்வளவு தூரம் வந்ததைப் பற்றி நான் நிரம்பவும் சந்தோஷமடைகிறேன். நான் எழுதியுள்ள விஷயம் உண்மையானதா பொய்யானதா என்பதை அறிந்துகொள்ள நீங்கள் அதிக ஆவல் கொண்டி ருக்கலாம். அதற்காக உங்களை நான் நீண்டகாலம் தாமதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய தினமே நீங்கள் உண்மையை நேரில் அறிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இந்த ஊர் அரண்மனையில் இராஜபத்தினிமார்வசிக்கும் அந்தப்புரங்களை அடுத்தாற்போல ஒரு பெருத்த பூங்காவனம் இருக்கிறது. நீங்கள் இன்றைய தினம் இரவு சுமார் 7.30 மணிக்கு அந்தப் பூங்காவனத்துக்குள் வந்து சேரவேண்டும். அந்தத்தோட்டத்தின் வடமேற்குத் திக்கில் மதிலில் ஒரு சிறிய கதவு இருக்கிறது. அதன் உட்புறத்துத் தாழ்ப்பாளை நான்திறந்து வைத்திருக்கிறேன். நீங்கள் யாருக்கும் தெரியாமல் அந்தக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து நேரில் தென்மேற்குத் திக்கில் போனால், அந்தப்புரத்தண்டை போப் ச் சேருவீர்கள். அவ்விடத்தில் ராஜஸ்திரீகள் பூங்காவனத்துக்குள் வருவதற்காக அமைக்கப்பட்ட வாசல் ஒன்று இருக்கிறது. அதற்கு எதிரில் ஒர் ஆலமரமும், அதன் கீழ் ஒரு சலவைக் கல் மேடையும், அதைச் சுற்றிலும் அடர்த்தியான பூச்செடிகளும் இருக்கின்றன. நீங்கள் நேராக அந்தச்சலவைக்கல் - மேடையண்டை போய் அதன் கீழுள்ள குடைவில் மறைந்து ஒளிந்துகொண்டிருந்து கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அங்கே என்ன நடக்கிறதென்று கவனித்துப் பாருங்கள். ஆனால், நான் ரு.ஜூப்படுத்தக் கூடிய முக்கியமான பெரிய விஷயம் இன்னொன்று இருக்கிறது. அதை நான் இன்னம் சில தினங்களில் காட்டப் போகிறேன். அதுவரையில் நீங்கள் உங்களுடைய ஆத்திரத்தை வெளியில் காட்டக் கூடாது, இன்றையதினம்