பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பூர்ணசந்திரோதயம்-4 நான் மறுபடியும் கர்ப்பிணி ஆகிவிட்டால், தஞ்சாவூரில் நான் அதை எப்படிமறைக்கிறது? இந்த ஊர் என்னுடைய சொந்த ஊர். இங்கே ஏராளமான வசதிகள் இருக்கின்றன. அதுவுமன்றி, இவ்விடம் தஞ்சாவூருக்கு வெகுதூரத்தில் இருப்பதால், இந்த விஷயம் வேறே யாருக்காவது தெரிந்தாலும், அது இந்த ஊரோடு அற்றுப்போகுமே அன்றி தஞ்சாவூர் வரையில் எட்ட முகாந்திரமில்லை. தஞ்சாவூரிலோ அந்த அனுகூலம் இருக்காது. ரகசியம் யாராவது ஒருவருக்குத் தெரிந்தால், அது உடனே சகலமான ஜனங்களுக்கும் பரவிப்போம். அடுத்த கூடிணத்தில் விஷயம் இளவரசருக்கும் பெரிய ராணிக்கும் எட்டிவிடும். உடனே என்கதி அதோகதிதான். ஆகையால், நான் பயப்படுவது முக்கியமாக இந்த ஒரு குழந்தையைப் பற்றியதல்ல; இனி ஆயுசுகால பரியந்தம் நம்முடைய நீடித்த சிநேகத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் இடர்களையும் பற்றியே நான் நிரம்பவும் பயப்படுகிறேன்.

மோகனராவ் :- ஏன்? இப்போது இங்கே உன்னோடுகூட இருக்கும் தாதிப்பெண்களான அம்மாளு, தனம், அபிராமி முதலியோர் நீ தஞ்சாவூருக்குப் போகும்போது உன்னோடு கூடத்தானே வரப் போகிறார்கள்? அவர்களையே நீ எப்போதும் உன்னிடம் தாதிகளாக வைத்துக்கொண்டிருந்தால், அவர்கள் இப்போது இருப்பதுபோல உன்னிடம் அந்தரங்க அபிமானம் உள்ளவர்களாக இருக்கமாட்டார்களா? இப்போது செய்வதுபோல இந்த விஷயங்களில் உனக்கு எப்போதும் உதவி செய்ய மாட்டார்களா?

லலிதகுமாரி:- இந்தத் தாதிகள் இப்போது நிரம் பவும் உறுதியான மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள்; இருந்தாலும் அங்கே போனபிறகு எப்படியிருப்பார்களோ? மனித சுபாவம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி சிறுகச் சிறுக மாறுதலடையக் கூடியது. இந்தத் தாதிப்பெண்களுக்கும் அந்த இளவரசனுக்கும் அந்தரங்கமான சிநேகம் உண்டென்று நான் ஏற்கெனவே பல