பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 தடவைகளில் கேள்வியுற்றிருக்கிறேன். இவர்கள் மறுபடியும் திரும்பி அந்த ஊருக்குப் போனால், இளவரசன் இவர்களை அப்படியும் சந்தித்து பழையபடி சிநேகம் பாராட்ட நேரும். இவர்களோஅற்ப வேலைக்காரர்கள். இவர்களுடைய புத்தியும் அற்ப புத்தியாகத்தான் இருக்கும். இந்த ரகசியத்தை இளவரசனிடம் சொன்னால், அவன் தங்களுக்குப் பெருத்த சன்மானமாகக் கொடுப்பானென்று நினைத்து இவர்கள் எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாலும் சொல்லக்கூடும். அல்லது, இவர்கள் அவனிடம் இதை வெளியிடவில்லை என்றே வைத்துக் கொண்டாலும், இவர்கள் யெளவனப் பருவப் பெண்கள். இவர்கள் எப்படியும் வெகு சீக்கிரம் ஒரு புருஷனை அடையக் கூடியவர்கள். அப்படிஅடையும்போது, ஒருவருக் கொருவர் புது மோகத்தில் தங்கள் மனசிலுள்ள ரகசியங்களை எல்லாம் எப்படியும் வெளியிட்டுக் கொள்வார்கள். ஒருவேளை இந்த ரகசியத்தையும் தாதிப்பெண்கள் தத்தம் புருஷரிடம் சொல்லக் கூடும். அந்தப் புருஷர் இன்னும் அவர்களிடம் அந்தரங்க நட்பாயிருக்கும் வேறு பிற புருஷரிடத்திலோ ஸ்திரீகளிடத்திலோரகசியமாக வெளியிடுவார்கள். இதேமாதிரி சங்கதி ஒரு கூடிணத்தில் ஊர் முழுதும் பரவிப்போகும். எந்த விஷயமும் ஒருவருக்குத் தெரிந்தால் அந்தரங்கம் என்றும், இருவருக்குத் தெரிந்தால் பகிரங்கம் என்றும் சொல்வது உண்டு அல்லவா? ஆகையால், நாம் இந்தத் தாதிப் பெண்களை எப்போதும் நம்பியிருப்பது முடியாத காரியம் என்றே நினைக்கிறேன். -

மோகனராவ் :- அப்படியானால், நாம் வேறே என்ன செய்யலாமென்று நினைக்கிறாய்? உனக்கு இத்தனை துன்பங் களும் மனவேதனையும் உண்டானதற்கு முக்கியமாக நானே காரணமானவன். உன் இடர்களை எல்லாம் போக்குவதற்கு ஏதாவது வழியிருந்து, அதை என்னிடம் வெளியிடுவாயானால், நான் அப்படியே செய்யத்தடை இல்லை. உன் பொருட்டு நான் என் உயிரையும் கொடுத்துவிடத் தடையில்லை.