பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3CO பூர்ணசந்திரோதயம் - 4 எதிர்பார்த்து வாழ வேண்டும். இங்கே நீயே எல்லாவற்றிற்கும் எஜமானியாக இருந்து சுயேச்சையாக நடந்து கொள்ளலாம். அதுவுமன்றி, இங்கே இருப்பதில் உனக்கு இன்னொரு அதிகமான சுகமும் உண்டு. அங்கே உன்னுடைய புருஷன் சிறைச்சாலையில் இருக்கிறார். அவரிடத்திலும் உனக்கும் கொஞ்சமும் பிரியமில்லை; ஆகையால், நீ அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டுத்தனியாக இருந்து வருகிறாய். இவ்விடத்தில் நான் எப்போதும் உன்னோடு கூடவே இருந்து உன் தனிமையைத் தீர்த்து, நீ எவ்விதமான சுகத்தையும் சந்தோஷத்தையும் நாடுகிறாயோ, அவைகளைச் சதாகாலமும் உனக்கு உண்டாக்கிக் கொண்டு நான் உன்னுடைய அடிமையாக இருந்து வருவேன். நீகாலாலிடும் வேலையை நான் தலையால் செய்துவருவேன் என்பதை நீ உறுதியாக நம்பலாம். இது முக்கியமான முதலாவது அனுகூலம். இன்னொன்று என்னவென்றால், நீ உன் வீட்டில் இருந்தால், இப்போது இல்லாவிட்டாலும் இன்னம் சில தினங்களிலாவது போலீசார் உன்னை எப்படியும் பிடித்துக்கொண்டு போய்ச்சிறைப்படுத்தி, கொலைக்குற்றம் சுமத்துவார்கள். நீ என்னோடுகூட இருந்தால், உன்னை ஈசுவரன் கூடக் கண்டுபிடிக்க முடியாது. எப்படிப்பட்ட தந்திரசாலியான போலீஸ்காரனும் நீ இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இது இரண்டாவது அனுகூலம். ஆகையால், நீ உன்னுடைய இருப்பிடத்துக்குப் போவதைவிட இங்கே இருப்பது பல விதத்தில் உனக்கு நன்மையானது. இப்படிப்பட்ட அரிய நன்மைகளை உனக்குச் செய்ய முன் வந்திருப்பவனாகிய என்னிடத்தில் நீ நன்றி விசுவாசமும் பிரியமும் வைத்து என்னோடு எப்போதும் சந்தோஷமாகவும் அந்தரங்க வாஞ்சையோடும் நடந்து கொள்வதே நியாயமன்றி, புலிகரடிகளைக் கண்டு பயந்து மிரளுவதைப் போல நீ என்னைக் கண்டு அஞ்சி நடுங்குவதற்கு யாதொரு முகாந்தரமும் இல்லை. இப்போது நிரம்பவும் அகால வேளையாக இருக்கிறது. நீ மெத்தவும் அலுத்துப் போயிருக்கிறாய். இவ்விடத்திலேயே நீ