பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2 பூர்ணசந்திரோதயம்-4 வேண்டும் என்றும், அன்றைய இரவு வரையில் உட்புறத்தில் எங்கேயோ மறைந்திருந்து கடைசியில் ரதிகேளிவிலாசத்திற்குள் வந்து அங்கே நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமென்றும் அவள் சுலபத்திலேயே நிச்சயித்துக் கொண்டாள். ரதிகேளி விலாசத்தில் தனது பெரிய தந்தைக்கும் ஷண்முகவடிவிற்கும் நடந்த தர்க்கங்களைக் கேட்டமுதல் அவனது மனதில் காம விகாரம் தோன்றியிருப்பதோடு தனது விஷயத்திலும் ஒருவிதமான மதிப்புக் குறைவும் இளக்காரமும் உண்டாகி இருக்கவேண்டுமென்றும் அவள் எண்ணிக் கொண்டாள். ஆகவே, தான் அவனிடம் ஓங்கிப் பேசி அவனை வெல்ல முடியாதென்றும், அவனிடம் அடங்கி நடந்து கொண்டே ஏதேனும் தந்திரம் செய்து தப் பித்துப் போக வேண்டுமென்றும் அவள் எண்ணிக்கொண்டவளாய் அவனைப் பார்த்து, “நாயக்கரே எல்லாவற்றையும் அறிந்தவரான உமக்கு நான் அதிகமாகச் சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. நீர் இப்போது சொன்ன வார்த்தைகளெல்லாம் வாஸ்தவமான வார்த்தைகளாகவே இருக்கின்றன. அவைகளில் எதைப் பற்றியும் நான் எவ்வித ஆட்சேபமும் சொல்ல இடமில்லை. நீர் சொல்வது போல, நான் என்னுடைய ஜாகையிலிருப்பதைவிட இங்கே இருப்பதே பலவகையில் எனக்கு நன்மையானதாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு விஷயமிருக்கிறது. அதை மாத்திரம் நீர் கொஞ்சம் தயவாகக் கேட்டு என்மேல் இரக்கம் கொள்ள வேண்டும். நீர் இதுவரையில் என்புருஷரோடு சிநேகமாயிருந்து எங்களுக்கு எத்தனையோ விஷயங்களில் அருமையான உதவிகள் செய்திருக்கிறீர். இதுவரையில் நான் உம்மை என்னுடைய சொந்தத் தமையனார்போலவே மதித்து வந்திருக்கிறேன். உம்முடைய விஷயத்தில் நான் இதுவரையில் எவ்விதமானதுர்நினைவும் கொண்டதே இல்லை. ஆகையால், நீர் பிரஸ்தாபிக்கும் புதிய விஷயத்தை நான் இதுவரையில் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் இனி எப்போதும் உம்மோடுகூடவே இருக்கவேண்டுமென்று நீர்ஆசைப்படுகிறீர்