பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3O3

என்பது எனக்கு இப்போதே தெரிகிறது. ஆகையால், நான் திடீரென்று இந்த விஷயத்தில் என் மனசைமாற்றிக் கொள்வது கொஞ்சம் பிரயாசையாக இருக்கிறது. நான் இப்போது என்னுடைய ஜாகைக்குப் போக அவசரப்படவில்லை. நீர் சொல்வதுபோல நான் இன்று ராத்திரி, இவ்விடத்திலேயே படுத்துக்கொள்ளுகிறேன். நாளையதினம் சாயுங்காலத்துக்குள் நான் இந்த விஷயத்தைப்பற்றி நன்றாக யோசித்து என் மனசை ஒருவிதமாகச் சமாதானப்படுத்திக் கொள்ளுகிறேன். அதன் பிறகும் உமக்கு என்மேல் ஆசை இருக்குமானாலும், உம்முடைய பிரியப்படி என்னை இவ்விடத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் உம்முடைய ஜாகையில் வைத்துக் கொள்ளலாம். நான் என்னுடைய ஆயிசுகாலம் வரையில் உம்மிடத்திலேயே இருப்பதோடு, உம்முடைய விஷயத்தில் உண்மையான பிரியத்தோடும், அந்தரங்கமான உறுதியோடும் நடந்துகொள்ள ஆட்சேபணை இல்லை. நீர் பிரஸ்தாபிக்கும் விஷயம் இப்போதே என் மனசுக்குச் சம்மதியானதாக இருக்கிறது. ஆனாலும், என் மனசைப் பலமாகப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கும் ஒருவித வெட்கமும் கூச்சமும் விலகுவதற்கு நீர் எனக்கு இந்த ஒர் இரவு தவணை கொடுக்க வேண்டும். அதுவுமன்றி, இன்றைய தினம் நடந்த பல விஷயங்களினால், என் மனம் நிரம்பவும் கலவரமடைந்து தவித்துக் கொண்டிருக்கிறது. உடம்பு அலுத்துப் போயிருக்கிறது. ஆகையால், இப்போது நான் உம்மோடு சந்தோஷமாக இருக்க முயன்றாலும், அது கொஞ்சமும் சாத்தியப்படாதுபோல இருக்கிறது. எல்லாவற்றையும் யோசித்து நீர் என்னை நாளை சாயுங்காலம் வரையில் நிம்மதியாக இருக்கவிடவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். நாளைய தினம் இரவில் நீர் வண்டியோடு வரலாம். நான் உடனே அதில் ஏறிக்கொண்டு உம்மோடு வந்துவிடுகிறேன். அங்கே போனபிறகு உம்முடைய பிரியம் எப்படியோ அப்படியே என்னை நீர் நடத்திக் கொள்ளலாம். நானும் உம்முடைய பிரியத்திற்கு இணங்க go.g.IV-20