பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 329 ஆயாசப்படுவதேன்? - என்று கூறி அதற்குமேல் தனது வரலாறு முழுதையும் விரிவாக எடுத்துரைத்தாள். தனக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட காதலையும் ரகசியமான பழக்கத்தையும் கடைசியில் ஒருநாளிரவில் அவர்தான் இருந்த மேன்மாடத்திற்கு வந்திருந்ததையும் அப்போது தனது கணவன் வந்ததைக் கண்டு அவர் வெந்நீர் அண்டாவிற்குள் ஒளிந்து கொண்டதையும், அவ்விடத்திலிருந்தபடி அவர் உயிர் துறந்ததையும் அவள் விரிவாக எடுத்துக் கூறினாள். -

இதன் தொடர்ச்சி 5ம் பாகத்தில் தொடரும்....