பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பூர்ணசந்திரோதயம்-4 குதுகலமாகவும் ஆவலோடும் சொல்லும்படி செய்கிறேன். ‘கமலத்தம்மாள் இங்கேயே வருகிறார்களா, கீழேயே எங்களை அழைத்து வரச் சொன்னார்களா?’ என்று நீ அவளிடம் கேள். கமலம் வீட்டுக்குள்ளிருக்கும் அவளுடைய சயன அறைக்குப் போயிருப்பதாகவும் உங்கள் இருவரையும் பின்பக்கமாக அவ்விடத்துக்கே வந்துவிடச் சொன்னதாகவும் வேலைக்காரி சொல்லிவிட்டுக் கீழே இறங்கி வந்துவிடுவாள். நீ உடனே ஷண்முகவடிவை அழைத்துக்கொண்டு பின்புறமாக ரதிகேளி விலாசத்துக்குள் அவளை அழைத்துக்கொண்டு போய், எப்படியாவது தந்திரம் செய்து அங்கேயுள்ள விசைவைத்த நாற்காலி ஒன்றன் மேல் அவள் உட்கார்ந்து கொள்ளும்படி செய்தால் அவளை உடனே அந்த நாற்காலியின் விசைகள் இறுகப் பிடித்துக்கொள்ளும். அதன்பிறகு நீ அங்கே இருக்க வேண்டியதில்லை. உடனே நீ கதவை மூடிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிடு. அதற்குள் நான் சந்தடி செய்யாமல் வெல்வெட்டு மாடத்துக்கு வந்து, மறைவாக இருக்கிறேன். நீ வெளியில் வந்தபிறகு இரண்டொரு நாழிகை நேரம் நாம் அவளை அந்த நாற்காலியிலேயே இருக்கவிட்டு வைப்போம். அவளுடைய உடம்பின் முறுக்கும் திமிரும் தளர்ந்து போகும். பெருத்த திகிலும் கவலையும் உண்டாகிவிடும். எப்படியாவது அதிலிருந்து விடுவித்துக் கொண்டால் அதுவே போதுமென்று ஆகிவிடும். பிறகு நான்போனால், அவள் அதிகமாக சிரமம் கொடுக்காமல் சுலபத்தில் வழிக்கு வருவாள். உடனே அவளை நான் விடுவித்து என் பிரியப்படி நடத்திக் கொள்கிறேன். நான் சொல்லுகிறது தெரிகிறதா? அப்படியே செய்வாயா? இந்தக் காரியம் உனக்கு ஒரு பெரிதல்ல; சுலபத்தில் செய்யக் கூடியதே. எப்படியும் நீ இந்தக் காரியத்தைச் செய்தே தீரவேண்டும். இன்றைய தினம் இராத்திரிக்குள் நான் அவளை என்னுடைய சம்சாரமாக்கியே தீரவேண்டும் ‘ என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினார்.