பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 55 உண்டாயிற்று. அது இப்போது நிஜமாகி விட்டது. இப்போது நடந்ததிலிருந்து நான் யோசிக்க யோசிக்க, நேற்று முதல் எனக்குச் சொல்லி வந்திருக்கும் முகாந்திரமெல்லாம் உண்மையாக இராதென்றே எண்ண வேண்டியிருக்கிறது. என் அக்காள் மாரியம்மன் கோவிலுக்குப் போயிருக்கிறாள் என்பதும், அவள் அவ்விடத்தில் மூன்று நாள் வரையில் தங்க நேர்ந்தது என்பதும், இன்று நீங்கள் அரண்மனையில் விருந்துண்டு மாரியம்மன் கோவில் போனதும், நீங்கள் ஓர் ஆளை முதலிலும், கமலத்தைப் பின்னாலும் அனுப்பிவிட்டு அவ்விடத்திலேயே இருந்து விட்டீர்கள் என்பதும், இங்கே கமலம் வந்து அம்மன் பிரஸாதத்தை உள்ளே வைத்துவிட்டு இந்த அந்தப் புரத்துக்கு வரப்போகிறாள் என்பதும், உங்களுடைய தங்கை விளக்கேற்ற போவதாய்ச் சொன்னதும் ஆகிய சகலமான விஷயங்களும் கட்டுப்பாடான விஷயம் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. கண்ணம்மாள், ஆரம்பத்திலிருந்து என்னிடம் நடந்து கொண்ட மாதிரியையும் கடைசியில் என்னை இந்தவிதமான மோசத்தில் மாட்டி விட்டதையும் பார்த்தால், அவளும் உங்களுடைய துர் நடத்தைகளுக்கு எல்லாம் உடந்தையாக இருப்பவள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பெண் விதவையாம். உங்களுடைய நடத்தையைவிட அவளுடைய நடத்தைதான் என் மனசில் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. அவள் உங்களுடைய தங்கையென்று சொல்வதே தகாது. அவள் உங்களால் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் கேவலமான ஒரு தாசியென்று சொல்வதே பொருத்தம் உடையதாய் இருக்கும். கற்பு என்பது மருந்துக்காவது கொஞ்சம் அவளிடத்தில் இருக்குமானால் அவள் என் விஷயத்தில் இப்படிப்பட்ட மோசமும் சதியும் செய்தே இருக்கமாட்டாள். இப்படிப்பட்ட கடின மனசுடையவர்களான நீங்கள் என்னுடைய அக்காளைக் கொன்று இந்த வீட்டுக்குள் எங்கேயாவது புதைத்திருந்தாலும் இருப்பீர்கள்? போனது போகட்டும். இப்போதாவது எனக்கு