பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பூர்ணசந்திரோதயம்-4 உண்மையைச் சொல்லுவீர்களானால், அதைக் கேட்டுத் கொண்டு நான் உடனே இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு வெளியில் போய் விடுகிறேன். உண்மையில் இப்போது என்னுடைய அக்காள் எங்கே இருக்கிறாள்? நீங்கள் என்ன காரணத்தினால் எங்கள் குடும்பத்துக்குப் பண உதவி செய்து வந்தீர்கள்? என் அக்காள் திருவாரூரிலிருந்து இங்கே வந்தபின் நீங்கள் அவளை என்ன செய்தீர்கள்? அவளை இப்போது நான் அரை நாழிகை சாவகாசமாவது பார்த்து அவளுடன் பேச அனுமதி கொடுப்பீர்களா? இந்த விவரங்களை எல்லாம் உண்மையாகச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லுகிறது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், நீங்கள் என் அக்காள் ஒருத்தியைக் கெடுத்தது ஒன்றே போதாதா? என்னையும் கெடுக்க வேண்டுமா? இன்னம் கால் நாழிகை சாவகாசம் கூட என் பிராணன் நில்லாது போலிருக்கிறது. ஆகையால், என்னை நீங்கள் உடனே விடுவிக்கா விட்டால், அக்கிரமமாக என்னைக் கொன்றபாவம் உங்களைத்தான்சாரும். ஆகையால், தயைசெய்து கேவலம் ஏழையிலும் பரம ஏழையான என் பேரில் நீங்கள் வர்மம் பாராட்டாமல் என்னை விடுவித்து உடனே என் அக்காளிடம் சேர்த்து வையுங்கள். உங்களுக்கு நிரம்பவும் புண்ணியமுண்டு. எனக்காவது என் அக்காளுக்காவது உங்களுடைய சொத்துக்களில் ஒரு துரும்பு கூடத் தேவையில்லை; நாங்கள் பிச்சை எடுத்தாவது மானமாக வயிறு வளர்க்கப் பிரியப்படுகிறவர்களே அன்றி, மானத்தையும் கற்பையும் விற்று குபேரசம்பத்தில் இருக்கவும் இஷ்டப்பட மாட்டோம் ஆகையால், நீங்கள் என்பேரில் கொண்ட துர் எண்ணத்தை இவ்வளவோடு விலக்கி விடுங்கள். உங்களுக்கு ஏராளமான ஐசுவரியம் இருக்கிறது. இந்த ஊரில் பூர்ணசந்திரோ தயத்தைப் போன்ற பொது ஸ்திரீகள் எத்தனையோ பேர் இருக்கலாம். அழகிலும் புருஷருடைய மனசைமயக்குவதிலும் வேறு சகலமான அம்சங்களிலும் அவர்கள்தான் பொருத்த மானவர்கள். அவர்கள் எல்லோரும் தங்கள் ஜீவனத்துக்கு