பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 * பூர்ணசந்திரோதயம் - 4 என் பிரியப்படி நடந்துகொள்ளுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்; உடனே உன்னை இந்த உபத்திரவத்திலிருந்து விடுவிக்கிறேன். நீஅநாவசியமாகப் பேச்சைவளர்க்க வளர்க்க, உன்னுடைய விடுதலைதான் தாமதப்படுகிறது; நீ மாத்திரம் என்னுடனேயே இருந்து விடுவதாக ஒப்புக்கொண்டால், உன்னை நான் உன் ஆயிசுகாலபரியந்தம் கைவிடுகிறதில்லை; இவ்வளவு பெரிய மாளிகையையும் அபாரமான ஐசுவரியங் களையும் நீயே ஆண்டு அனுபவித்து இவைகளுக்கு எல்லாம் எஜமானியாக இருக்கலாம். சாஸ்திரப் படி உன்னை நான் கலியாணம் செய்துகொள்ள வேண்டும் என்றாலும், அதற்கு நான் சம்மதிக்கிறேன். கிழவனைக் கட்டிக்கொண்டால் பிறர் பரிகாசம் செய்வார்கள் என்று நீ ஒருவேளை வெட்கப்படுவாய். அப்படியானால், கலியாணச் சடங்கே இல்லாமல் மற்றப்படி நாம் புருஷனும் பெண் ஜாதியும் போலவே இருக்கலாம். உன் மனம் கோணாதபடி நான் நடந்துகொள்ளுகிறேன். என்ன சொல்லுகிறாய்? நன்றாக யோசித்து முடிவாகச் சொல்லிவிடு’ என்று நைந்து இளகி உருக்கமாக மொழிந்தார்.

அதைக்கேட்ட ஷண்முகவடிவு, ‘ஐயா! நீங்கள் சொல்லுகிறது போல நடக்க எனக்குக் கொஞ்சமும் இவர் டமில்லை. ஆகையால், நீங்கள் என்னை அநாவசியமாக உபத்திரவிப்பதில் உபயோகமில்லை. தயை செய்து என்னை இந்த நாற்காலி யிலிருந்து விடுவித்து என் அக்காளிடம் கொண்டு போய் விட்டு விடுங்கள். உங்களுக்குப் பெருத்த புண்ணியம் உண்டாகும். நீங்கள் செய்த கொடுமையை எல்லாம் நான்மறந்து போகிறதும் அன்றி, உங்களைப்பற்றி அவதூறாக யாரிடத்திலும் பேசவும் மாட்டேன். இது உறுதியான வார்த்தை” என்றாள்.

மருங்காபுரி ஜெமீந்தார், ‘அதுதான் முடியாத காரியம். இவ்வளவு தூரம் நீ வந்து என் மனசை மயக்கி நான் பைத்தியம் கொள்ளும்படி செய்துவிட்டு, என்னை இதே நிலைமையில் விட்டுத் தப்பித்துக் கொண்டு போய்விடுவது என்றால், அது