பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59 சாத்தியமானதல்ல. நான் உன்னை இனி உன் ஆயுசுகால பரியந்தம் இந்த மாளிகையிலிருந்து வெளியில் போகவே விடப் போகிறதில்லை. எனக்கு நீ ஆசை நாயகி ஆகவே வேண்டும். இந்த விஷயத்தில் தானாகக் கனிந்து வருவதே நல்லதென்று நான் உன்னை இவ்வளவு தூரம் கெஞ்சி மன்றாடுகிறேன். ஆகையால், நீiணில் காலஹரணம் செய்யாமல் சம்மதம் என்று சொல்லிவிடு. இதுதான் கடைசியான வார்த்தை. நீ மேன் மேலும் உன்னுடைய போக்காகவே பேச ஆரம்பித்தால் நான் இதற்குமேல் வாயால் மறுமொழியே சொல்லப் போகிற தில்லை. நீ கட்டப்பட்டிருக்கும் இந்த நிலைமையிலேயே நான் உன்னை எப்படி வேண்டுமானாலும் மானபங்கப்படுத்தலாம்; நீ கொஞ்சமும் திமிரவும் முடியாது. அப்படி இப்படி நகரவும் முடியாது. ஆனாலும், அப்படிச் செய்ய எனக்கு இஷ்டமில்லை. அப்படிச் செய்வதிலும் கொஞ்சமாவது சுகமில்லை. ஆகையால் நான் உன்னை இந்த நாற்காலியிலிருந்து விடுவித்து பலாத்காரம் செய்து நிமிஷத்தில் உன்னை அடக்கி விடுவேன். ஒருவேளை நீ முரட்டுத்தனம் செய்வாயானால், இந்த அறையைச் சுற்றிலும் முரட்டு வேலைக்காரிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நொடியில் உள்ளே வந்து உன் கொழுப்பை அடக்கிவிடுவார்கள். ஆகையால், நீ முடிவாகச் சொல்லிவிடு. நீயாகப் பிரியப்பட்டு என் சொல் படி நடந்து கொள்ளுகிறாயா, அல்லது, நான் பலாத்காரமாகவே உன்னை அடக்கிக் கொள்ளட்டுமா? இப்போது நான் என்னுடைய பிரியத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் உன்னை வெளியில் விடப்போகிறதும் இல்லை. உன் அக்காள் இருக்கும் இடத்தை நான் உனக்குக் காட்டப் போகிறதும் இல்லை. என்ன சொல்லுகிறாய்?’ என்று கூறிய வண்ணம் இரண்டோரடிதுரம் அப்பால் நகர்ந்து ஒரு விசையில் கையை வைத்தழுத்த, குபிரென்று விளக்குகள் பற்றிக்கொள்ள அந்த மாடம் முழுதும் பளிச்சென்ற பிரகாசம் நிரம்பியது. நாற்புறங்களிலும் நிறைந்திருந்த விநோதப் பஞ்சணைகளும், காமாதுரப் பதுமைகளும் படங்களும், அற்புத அலங்காரங்